நடிகை அஞ்சலி மீதான ஹேபியஸ் கார்பஸ் வழக்கு வாபஸ் இல்லை: சித்தி பாரதிதேவி வக்கீல் தகவல்
Page 1 of 1
நடிகை அஞ்சலி மீதான ஹேபியஸ் கார்பஸ் வழக்கு வாபஸ் இல்லை: சித்தி பாரதிதேவி வக்கீல் தகவல்
நடிகை அஞ்சலி கடந்த 8-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக தன்னை சித்ரவதை செய்வதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறினார். தான் சம்பாதித்த பணத்தை அபகரித்து விட்டதாகவும் கூறினார்.
அஞ்சலி திடீரென தலைமறைவானதால் அவரை கண்டுபிடிக்கும்படி அஞ்சலி சகோதரர் ஐதராபாத் போலீசில் புகார் செய்தார். இதுபோல் சித்தி பாரதிதேவியும் அஞ்சலி கடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார்.
அத்துடன் அஞ்சலியை போலீசார் தேடி கண்டுபிடித்து ஆஜர்படுத்தகோரி சென்னை ஐகோர்ட்டிலும் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சென்னை ஐதராபாத் போலீசார் அஞ்சலியை தேடினர். இதனால் அவர் ஐதராபாத் போலீசில் திடீரென ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என வாக்குமூலம் அளித்தார்.
தற்போது இந்தியில் இருந்து தெலுங்கில் ‘ரீமேக்’ ஆகும் போல்பச்சன் படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த ஒரு வாரமாக நடந்தது. இன்றுடன் படப்பிடிப்பு முடிகிறது.
இதற்கிடையில் ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் அஞ்சலி கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அவர் வருவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. சென்னை போலீசாரும் அஞ்சலியிடம் விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
வழக்கை சித்தி பாரதிதேவி வாபஸ் பெறப்போவதாகவும் தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து பாரதிதேவியின் வக்கீல் ஜெயப்பிரகாசிடம் கேட்டபோது மறுத்தார். அஞ்சலி வருகிற 26-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும். போலீசார் அஞ்சலியிடம் விசாரித்ததாக தகவல் இல்லை. கோர்ட்டில் அஞ்சலி ஆஜராவது வரை வழக்கை வாபஸ் பெறுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார்.
அஞ்சலி திடீரென தலைமறைவானதால் அவரை கண்டுபிடிக்கும்படி அஞ்சலி சகோதரர் ஐதராபாத் போலீசில் புகார் செய்தார். இதுபோல் சித்தி பாரதிதேவியும் அஞ்சலி கடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார்.
அத்துடன் அஞ்சலியை போலீசார் தேடி கண்டுபிடித்து ஆஜர்படுத்தகோரி சென்னை ஐகோர்ட்டிலும் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சென்னை ஐதராபாத் போலீசார் அஞ்சலியை தேடினர். இதனால் அவர் ஐதராபாத் போலீசில் திடீரென ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என வாக்குமூலம் அளித்தார்.
தற்போது இந்தியில் இருந்து தெலுங்கில் ‘ரீமேக்’ ஆகும் போல்பச்சன் படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த ஒரு வாரமாக நடந்தது. இன்றுடன் படப்பிடிப்பு முடிகிறது.
இதற்கிடையில் ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் அஞ்சலி கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அவர் வருவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. சென்னை போலீசாரும் அஞ்சலியிடம் விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
வழக்கை சித்தி பாரதிதேவி வாபஸ் பெறப்போவதாகவும் தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து பாரதிதேவியின் வக்கீல் ஜெயப்பிரகாசிடம் கேட்டபோது மறுத்தார். அஞ்சலி வருகிற 26-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும். போலீசார் அஞ்சலியிடம் விசாரித்ததாக தகவல் இல்லை. கோர்ட்டில் அஞ்சலி ஆஜராவது வரை வழக்கை வாபஸ் பெறுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» எஸ்.பி.பி.சரண் மீதான பாலியல் வழக்கை வாபஸ் பெறுவதில் திடீர் சிக்கல்
» பணம் கொடுத்த தொழில் அதிபருடன் சமரசம்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ் ஆகிறது
» போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை
» நடிகை ஷகீலா மீதான ஆபாச வழக்கு மார்ச் 22க்கு ஓத்தி வைப்பு
» எஸ்.பி.பி.சரண் மீதான பாலியல் வழக்கை வாபஸ் பெறுவதில் திடீர் சிக்கல்
» பணம் கொடுத்த தொழில் அதிபருடன் சமரசம்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ் ஆகிறது
» போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை
» நடிகை ஷகீலா மீதான ஆபாச வழக்கு மார்ச் 22க்கு ஓத்தி வைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum