தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி

Go down

நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி Empty நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி

Post  ishwarya Sat May 04, 2013 2:19 pm

படப்பிடிப்புக்கு வர மறுப்பதால் நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்யப்போவதாக டைரக்டர் களஞ்சியம் கூறினார். இவர் ‘ஊர் சுற்றிப் புராணம்’ என்ற படத்தை டைரக்டு செய்து கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் அஞ்சலியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்தது. அஞ்சலி இதில் பங்கேற்று நடித்து கொடுத்தார். அதன் பிறகு தான் வீட்டை விட்டு வெளியேறி மாயமானார்.

சித்தி பாரதி தேவியும் டைரக்டர் களஞ்சியமும் தன்னை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டும் கூறினார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சென்னைக்கு வரமாட்டேன் என்றும் கூறினார். ஐதராபாத்தில் தங்க வீடு பார்ப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு படங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளார்.

வெங்கடேஷ் ஜோடியாக போல் பச்சன் தெலுங்கு ‘ரீமேக்’ படத்தில் நடிக்கிறார். பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் படங்களில் இனிமேல் நடிக்க மாட்டார் என்று நெருக்கமானவர்கள் கூறினர். இதற்கிடையில் ஊர் சுற்றி புராணம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நேற்று நடத்த டைரக்டர் களஞ்சியம் திட்டமிட்டு இருந்தார். அஞ்சலி வராததால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டார்.

இது குறித்து களஞ்சியம் கூறியதாவது:-

ஊர் சுற்றி புராணம் படப்பிடிப்பில் அஞ்சலி கடந்த மாதம் பங்கேற்றார். 15 நாட்கள் நடித்து கொடுத்தார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நேற்று நடத்த இருந்தேன். அஞ்சலி வரவில்லை. இந்த படம் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. எனவே அஞ்சலி இல்லாமல் படப்பிடிப்பை நடத்த இயலாது. எனவே படப்பிடிப்பை ரத்து செய்து விட்டேன்.

அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. படத்துக்கு ஏற்கனவே ரூ.40 லட்சம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினைக்காக நேரடியாக அஞ்சலி மீது வழக்கு தொடர அவசியம் இல்லை. படம் எடுப்பவர்களை பாதுகாக்க சினிமாவிலேயே நிறைய சங்கங்கள் உள்ளன. எனவே அஞ்சலி மீது தயாரிப்பாளர் சங்கம், டைரக்டர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

களஞ்சியம் புகார் அளித்ததும் நடிகர் சங்கம் நடவடிக்கையில் இறங்கும் என தெரிகிறது. படத்தில் நடிக்கும்படி நடிகர் சங்கம் உத்தரவிடும். அஞ்சலி மறுத்தால் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» அஞ்சலி புகார் விவகாரத்தில் அரசியல் சதி: டைரக்டர் களஞ்சியம்
» சொத்துக்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு: நடிகர் சங்கத்தில் அஞ்சலி புகார்?
» தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை பத்மபிரியா மீது புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum