தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரப்ஜித் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவு

Go down

 சரப்ஜித் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவு  Empty சரப்ஜித் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவு

Post  ishwarya Fri May 03, 2013 1:12 pm

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலையில் இறந்தார். அவரைத் தாக்கிய அமிர் அப்தாப் என்ற அமிர் தம்பேவாலா மற்றும் முதாசார் ஆகியோர் மீது லாகூர் காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாப் மாநில இடைக்கால முதல்வர் நஜம் சேத்தி கூறுகையில், “சரப்ஜித் சிங் சாவு தொடர்பாக 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சரப்ஜித்துக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும் சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வில்லை. ஆனால், திட்டமிட்டு இந்த தாக்குதல் நடந்ததா? என்பதற்கு ஆதாரம் இல்லை” என்றார்.

முன்னதாக பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சவுத்ரி, “மருத்துவமனையில் சரப்ஜித்துக்கு அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் இறந்துவிட்டார். அவரைப் பார்க்க அவரது உறவினர்களுக்கும், தூதரகத்திற்கும் அனுமதி வழங்கினோம். இந்த சம்பவத்தால் இந்தியா-பாகிஸ்தான் ஒட்டுமொத்த உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்ச்களில் சிறுமிகள் பலாத்காரம்! விசாரணைக்கு அதிரடி உத்தரவு!
» வேண்டுமென்றே மோசமாக ஆடிய வீராங்கனைகள்! விசாரணைக்கு உத்தரவு!
» மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
» கார் மோசடி வழக்கு: நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
»  லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித் சிங் மரணம் அடைந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum