தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குரோம்பேட்டையில் காதலிக்க மறுத்த நர்சிங் மாணவிக்கு அரிவாள் வெட்டு: கல்லூரி மாணவர் கைது

Go down

குரோம்பேட்டையில் காதலிக்க மறுத்த நர்சிங் மாணவிக்கு அரிவாள் வெட்டு: கல்லூரி மாணவர் கைது Empty குரோம்பேட்டையில் காதலிக்க மறுத்த நர்சிங் மாணவிக்கு அரிவாள் வெட்டு: கல்லூரி மாணவர் கைது

Post  ishwarya Fri May 03, 2013 1:08 pm

காஞ்சீபுரம் அருகே உள்ள மானாம்பதி கண்டிகையை சேர்ந்தவர் அனுராதா (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

நேற்று மதியம் கல்லூரி அருகே தோழிகளுடன் அனுராதா நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அனுராதாவை சரமாரியாக வெட்டினார். இதில் அனுராதா முகத்தில் பலத்த வெட்டு காயம் விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த மாணவிகள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த கல்லூரி காவலாளிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து குரோம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த மாணவி அனுராதா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிடிபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் கடலூரை சேர்ந்த சரவணகுமார் (வயது 22) என்பதும், கடலூரில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

போலீசார் சரவணகுமாரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, அனுராதா கடந்த 2 ஆண்டுகளாக தன்னை காதலித்து விட்டு தற்போது காதலிக்கவில்லை. நண்பராகதான் பழகினேன் என கூறி விட்டதாகவும், இதனால், ஆத்திரத்தில் அனுராதாவை கொலை செய்ய அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் கடலூரில் இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum