தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புற்றுநோய் முன் கண்டறியும் சோதனை திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

Go down

புற்றுநோய் முன் கண்டறியும் சோதனை திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு  Empty புற்றுநோய் முன் கண்டறியும் சோதனை திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

Post  ishwarya Fri May 03, 2013 12:26 pm


புற்றுநோய், நீரிழிவு நோய், வாத நோய் ஆகியவற்றை முன் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் முன்னோடித் திட்டம் நாட்டின் 100 மாவட்டங்களில் செயல்பட தொடங்கியுள்ளதாக மத்திய குடும்ப நலம் மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் குலாம் நபி ஆசாத், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த சோதனை நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் என்றும், இப்படிப்பட்ட ஒரு மருத்துவத் திட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடாக இந்தியா இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

முன்னோடித் திட்டமாக தற்போது செயல்படத் தொடங்கியிருக்கும் இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு ரூ.1 இலட்சம் செலவில் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 27 இலட்சம் பேருக்கு புற்று நோய் உள்ளது என்றும் ஒவ்வொரு ஆண்டும் 11 இலட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுவது கண்டு பிடிக்கப்படுகிறது என்றும் கூறிய அமைச்சர் குலாம் நபி ஆசாத், இந்த புள்ளி விவரம் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்றும் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணு உலையில் முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் நடத்துவதா? உதயகுமார் கேள்வி
» பொது சேமநல நிதி, அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு
» மனநலம் குன்றிய குழந்தைகளை கருவில் கண்டறியும் சோதனை
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» விஸ்வரூபம் மீதான தடை சரியல்ல – மத்திய அரசு மறைமுக கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum