தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லையில் ஊடுருவல்: இந்தியா- சீனா பேச்சு தோல்வி

Go down

 எல்லையில் ஊடுருவல்: இந்தியா- சீனா பேச்சு தோல்வி Empty எல்லையில் ஊடுருவல்: இந்தியா- சீனா பேச்சு தோல்வி

Post  ishwarya Thu May 02, 2013 5:04 pm

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி சீன ராணுவம் திடீரென ஊடுருவியது. இந்திய மண்ணில் சுமார் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமித்து இருக்கும் சீன வீரர்கள் 5 கூடாரம் அமைத்து தங்கி இருக்கிறார்கள். அவர்கள் லடாக் நோக்கி மேலும் முன்னேறாமல் இருக்க இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவத்தை பின் வாங்கி செல்ல இந்தியா முதலில் கோரிக்கை விடுத்தது. ஆனால் சீனா அதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து இந்தியா- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. 2 தடவை பேச்சு தோல்வி அடைந்த நிலையில் நேற்று இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் லடாக் அருகே மூன்றாவது தடவையாக சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.

சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேவை இல்லாமல் வந்து இருப்பதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த சீனா, தாங்கள் இருக்கும் பகுதி, சீனாவின் எல்லைக்குட்பட்டது என்றனர். இதனால் நேற்று நடந்த 3-வது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இது இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளது.

லடாக் எல்லையில் ஆக்கிரமித்த பகுதியில் இருந்து திரும்பி செல்ல மறுக்கும் சீன நாணுவத்தினர் நேற்று பேச்சு வார்த்தையின் போது இந்தியாவிடம் சில நிபந்தனைகளை விதித்தனர். லடாக் எல்லையில் நிரந்தர கண்காணிப்பு கூடாரத்தை இந்தியா கட்டக்கூடாது என்றனர். மேலும் பக்சி, சுமர் செக்டார்களில் இந்தியா கட்டியுள்ள எல்லையோர கூடாரங்களை உடனே பிரித்து விட வேண்டும். சீன படைகளை நோக்கி இந்தியாவின் எந்த கூடாரமும் இருக்க கூடாது. தற்போது இருக்கும் பகுதியில் இருந்து இந்தியா முதலில் பின்வாங்கி செல்ல வேண்டும். கண்காணிப்பு பணியிலும் ஈடுபடக்கூடாது என்று சீனா கூறியுள்ளது.

மேலும் பிஜீங்கில் இருந்து உத்தரவு வரும் வரை தற்போது முகாமிட்டுள்ள இடத்தில் இருந்து நகரமாட்டோம் என்றும் சீனா திட்டவட்டமாக கூறிவிட்டது. இதன் மூலம் லடாக் எல்லையில் ஆக்கிரமித்த பகுதியில் இருந்து சீனா வெளியேறாது என்று தெரிகிறது. இந்திய ராணுவ வீரர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எல்லையில் ஒரு பகுதி தங்கள்கண் எதிரே பறிபோவதாக வேதனைப்படுகிறார்கள். ஆனால் மத்திய மந்திரிகள் ஏ.கே. அந்தோணி, சல்மான் குர்ஷித் இருவரும் சீனாவுடனான பேச்சு வார்த்தை சரியான திசையில் போய்க் கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனா ஊடுருவல் விவகாரம்: முப்படை தளபதிகளுடன் அந்தோணி ஆலோசனை
» சீன ராணுவம் ஊடுருவல்: மன்மோகன் சிங்குடன் ராணுவ தளபதி சந்திப்பு
» இந்திய பெருங்கடலை 'தோண்டும்' சீனா: கவலையோடு வேடிக்கை பார்க்கும் இந்தியா!
» இந்தியா தோல்வி அடைந்துவிட்டது என மட்டுவில் நையாண்டி செய்த ரணில்!
»  இந்தியாவுக்குள் ஊடுருவ 200 பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர்: ராணுவ அதிகாரி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum