தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

Go down

மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு Empty மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

Post  ishwarya Thu May 02, 2013 4:48 pm


மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு மாதம் 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்எண்ணெயை ஒதுக்கீடு செய்து வழங்கி வந்தது. ஆனால் சமீப காலமாக, தமிழ்நாட்டுக்கு வழங்கும் மண்எண்ணெய் அளவை மத்திய அரசு படிப்படியாக குறைத்து வந்தது. தற்போது தமிழ்நாட்டுக்கான மாதாந்திர மண்எண்ணெய் ஒதுக்கீடு அளவு 29 ஆயிரத்து 60 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

இதனால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு போதுமான அளவு மண்எண்ணெய் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கான மண்எண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

அதில், ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மாதாந்திர மண்எண்ணெய் ஒதுக்கீட்டு அளவு ஒரேடியாக 29 ஆயிரத்து 60 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டு உள்ளது என்றும், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்த ஒரு மாநிலத்திலும் இதுபோல் மண்எண்ணெய் ஒதுக்கீடு ஒரேடியாக குறைக்கப்படவில்லை என்றும் கூறி இருந்தார்.

மேலும் தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை என்பதால், மண்எண்ணெயின் தேவை அதிகரித்து உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

மண்எண்ணெய் ஒதுக்கீடு அளவை மத்திய அரசு குறைத்து வருவதால் மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், எனவே தமிழகத்துக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை நீக்கி மாநிலத்தின் ஒட்டுமொத்த மாதாந்திர தேவையான 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்எண்ணெய் ஒதுக்கீடு செய்யும்படியும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டு இருந்தார். அதற்கு முன் இடைக்கால ஏற்பாடாக குறைந்தபட்சம் மாதத்துக்கு 52 ஆயிரத்து 806 கிலோ லிட்டர் மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

ஆனால் அதுபோல் மண்எண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான மண்எண்ணெயின் அளவு குறைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கான மாதாந்திர மண்எண்ணெயின் அளவு 29 ஆயிரத்து 60 கிலோ லிட்டராக குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தமிழகத்துக்கு மாதம் 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» டேம் 999: தமிழக அரசின் தடையை எதிர்த்து இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» சோனியா காந்திக்கு எதிரான சுஷ்மாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை: மத்திய அரசு
» சோனியா காந்திக்கு எதிரான சுஷ்மாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை: மத்திய அரசு
» தமிழகத்தை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது- ஜெ. ஆவேசம்
» நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மத்திய அரசு மீது சி.பி.ஐ., கடும் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum