தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கும் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்ட திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Go down

அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கும் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்ட திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல் Empty அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கும் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்ட திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Post  ishwarya Thu May 02, 2013 4:34 pm

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏராளமான திருத்தங்கள் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. அந்த திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். மேலும், அவர்கள் மீது வழக்கு தொடருவதற்கு உரிய மேலிடம் அனுமதி வழங்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனுமதி வழங்குவதற்கோ அல்லது அனுமதி மறுப்பதற்கோ அதற்குரிய காரணங்களை கூறுவது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மீது, அவர்களது பணிக்காலத்தில் செய்த தவறுகளுக்காக வழக்கு தொடர்வதற்கு அனுமதி பெற வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நடைமுறைகளின்படி, பல்வேறு வகையான லஞ்ச வகைகள் குறித்து இந்த சட்ட திருத்தத்தில் விளக்கி கூறப்பட்டுள்ளது.

மேலும், திருமண சட்ட திருத்தம் குறித்து மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விவாகரத்து ஆன பெண்ணுக்கு கணவரின் சொத்தில் பங்கு அளிப்பது பற்றிய விதி குறித்து பல்வேறு அமைச்சகங்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால், அந்த சட்ட திருத்தம், மந்திரிகள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய தொகையை நிர்ணயிக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதியிட்டு இது அமலுக்கு வருகிறது. இதனால், டி.ஏ.பி. மற்றும் எம்.ஓ.பி. உரங்களின் விலை குறையும். பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான மொத்த மானியத்தொகை, 15 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.11 ஆயிரம் கோடி செலவில் மத்திய துணை ராணுவப்படைகளை நவீனமயமாக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இத்திட்டம், 5 ஆண்டுகளுக்குள் அமல்படுத்தப்படும்.

நகர்ப்புற ஏழைகளின் சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ரூ.22 ஆயிரத்து 507 கோடி செலவிலான தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

தலா ஒரு லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட மேலும் 294 நகரங்களில் 839 புதிய எப்.எம். ரேடியோ சேனல்கள் தொடங்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த தகவல்களை மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கும் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்ட திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
»  அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கும் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்ட திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» சி .பி.ஐ. அறிக்கையை திருத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் விலகல்?
» ஈழத்தமிழர் பிரச்சினையில் கூட்டணி கட்சிகளின் கருத்தைக்கேட்டு மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்
» ஈழத்தமிழர் பிரச்சினையில் கூட்டணி கட்சிகளின் கருத்தைக்கேட்டு மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum