தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித் சிங் மரணம் அடைந்தார்

Go down

 லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித் சிங் மரணம் அடைந்தார்  Empty லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித் சிங் மரணம் அடைந்தார்

Post  ishwarya Thu May 02, 2013 2:53 pm

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 1990-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சரப்ஜித் சிங்கின் கருணை மனுவை முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷரப் தள்ளுபடி செய்தார். இதனை தொடர்ந்து சரப்ஜித் சிங், காட் லக்பாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சக கைதிகள் 6 பேர் சரப்ஜித் சிங்கை செங்கல் மற்றும் கூரிய ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர்.

லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரப்ஜித் சிங், பலத்த தலைக்காயம் மற்றும் ரத்த உறைவு காரணமாக ஆழ்நிலை மயக்கத்திற்கு சென்று விட்டதாகவும், உயிருக்கு போராடுவதாகவும் தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர்கவுர் மற்றும் மனைவி 2 மகள்கள் லாகூர் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித் சிங்கை அவர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் இந்தியா திரும்பினர்.

இந்நிலையில், லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித் சிங் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சரப்ஜித் சிங் மரணம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்
»  தனி விமானம் மூலம் சரப்ஜித் சிங் உடல் இந்தியா வந்தது
» சரப்ஜித் சிங் சாவு: பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனம்
»  சரப்ஜித் சிங் படுகொலையைக் கண்டித்து போராட்டம்: சர்தாரி உருவ பொம்மை எரிப்பு
» சரப்ஜித் சிங் உடலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்: டெல்லியில் இருந்து விமானம் விரைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum