மயிலம் அருகே குண்டு வைத்து பாலத்தை தகர்க்க முயற்சி
Page 1 of 1
மயிலம் அருகே குண்டு வைத்து பாலத்தை தகர்க்க முயற்சி
புதுவையை அடுத்த வானூர் அருகே மயிலம் செல்லும் ரோட்டில் கரசானூர்-பெரும்பாக்கம் இடையில் சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழயாகவே பஸ் உள்ளிட்ட போக்குவரத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த பாலத்தில் இருந்து வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.
உடனே அவ்வழியாக சென்றவர்கள் பாலத்தில் வெடிகுண்டு வைத்து வெடித்திருக்கலாம் என கருதி இது குறித்து வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், வானூர் தாசில்தார் குமாரபாலன் ஆகியோர் வந்தனர். போலீசார் பாலத்தில் சோதனையிட்டபோது பாலத்தின் அடியில் தனித்தனியாக 10 இடங்களில் வெடிகுண்டுகள் (டெட்டனேட்டர்கள்) வெடிக்காமல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் 10 வெடி குண்டுகள் வேடித்து இருந்தது கண்டறியப்பட்டது. பாறைகளை உடைக்க பயன்படுத்தும் இந்த வெடிகுண்டுகளை மர்ம ஆசாமிகள் யாரோ நாச வேலை செய்யும் நோக்கத்தில் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. வெடி குண்டுகள் வெடித்ததில் பாலத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
அதே வேளையில் பாலத்தின் அருகில் உள்ள இரு புற சாலைகளும் 4 அங்குல அளவுக்கு விரிசல் காணப்பட்டது. அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததால் அந்த வழியாக அதிக போக்குவரத்து இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வெடி குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் பாலத்தில் இருந்து வெடிக்காத வெடி குண்டுகளை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். இது தொடர்பாக வானூர் போலிசார் வழக்கு பதிவு செய்து பாலத்தில் வெடிகுண்டுகள் வைத்தவர்கள் யார் என்பது குறித்தும், இந்த சம்பவத்தில் பா.ம.க.வினர் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடனே அவ்வழியாக சென்றவர்கள் பாலத்தில் வெடிகுண்டு வைத்து வெடித்திருக்கலாம் என கருதி இது குறித்து வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், வானூர் தாசில்தார் குமாரபாலன் ஆகியோர் வந்தனர். போலீசார் பாலத்தில் சோதனையிட்டபோது பாலத்தின் அடியில் தனித்தனியாக 10 இடங்களில் வெடிகுண்டுகள் (டெட்டனேட்டர்கள்) வெடிக்காமல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் 10 வெடி குண்டுகள் வேடித்து இருந்தது கண்டறியப்பட்டது. பாறைகளை உடைக்க பயன்படுத்தும் இந்த வெடிகுண்டுகளை மர்ம ஆசாமிகள் யாரோ நாச வேலை செய்யும் நோக்கத்தில் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. வெடி குண்டுகள் வெடித்ததில் பாலத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
அதே வேளையில் பாலத்தின் அருகில் உள்ள இரு புற சாலைகளும் 4 அங்குல அளவுக்கு விரிசல் காணப்பட்டது. அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததால் அந்த வழியாக அதிக போக்குவரத்து இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வெடி குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் பாலத்தில் இருந்து வெடிக்காத வெடி குண்டுகளை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். இது தொடர்பாக வானூர் போலிசார் வழக்கு பதிவு செய்து பாலத்தில் வெடிகுண்டுகள் வைத்தவர்கள் யார் என்பது குறித்தும், இந்த சம்பவத்தில் பா.ம.க.வினர் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈராக் கச்சா எண்ணெய் 'பைப் லைன்' குண்டு வைத்து தகர்ப்பு: ஏற்றுமதி நிறுத்தம்
» கல்லடி புதிய பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திறந்து வைத்தார்.
» ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்கள் உள்ளது. அதில் தான் அவை பவனி வரும். பஞ்ச மூர்த்தி உலா சிவாலயங்களில் நடைபெறும் பொழுது, ஒரு சப்பரத்தின் மீது ரிஷப வாகனத்தை வைத்து சுவாமி, அம்மனை ஜோடித்து வைப்பர். மூஞ்சுறு வாகனத்தின் மீது விநாயகரின் உற்சவ விக்ரத்தை வைத்து
» குண்டு மல்லிகை
» குண்டு பெண்களே இது உங்களுக்கு.........
» கல்லடி புதிய பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திறந்து வைத்தார்.
» ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்கள் உள்ளது. அதில் தான் அவை பவனி வரும். பஞ்ச மூர்த்தி உலா சிவாலயங்களில் நடைபெறும் பொழுது, ஒரு சப்பரத்தின் மீது ரிஷப வாகனத்தை வைத்து சுவாமி, அம்மனை ஜோடித்து வைப்பர். மூஞ்சுறு வாகனத்தின் மீது விநாயகரின் உற்சவ விக்ரத்தை வைத்து
» குண்டு மல்லிகை
» குண்டு பெண்களே இது உங்களுக்கு.........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum