தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மஹிந்தர் மீது அமெரிக்காவில் பதியப்பட்ட வழக்கு தள்ளுபடி..

Go down

மஹிந்தர் மீது அமெரிக்காவில் பதியப்பட்ட வழக்கு தள்ளுபடி..  Empty மஹிந்தர் மீது அமெரிக்காவில் பதியப்பட்ட வழக்கு தள்ளுபடி..

Post  ishwarya Tue Apr 30, 2013 5:04 pm

லண்டனைச் சேர்ந்த காசிப்பிள்ளை உள்ளிட்ட விடுதலைப் புலிகள் ஆதரவாளர் 3 பேர் இலங்கை அதிபர் மகிந்தராஜபக்சே மீது அமெரிக்க மேல் முறையீட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கில் புலிகள் மீது போர் தொடுத்ததால் தமக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அதற்கு ராஜபக்ஷ இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருந்தனர்.

இவ்வழக்கினை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது. அதன் தீர்ப்பில் அதிபர் பதவி வகிக்கும் வரையில் ராஜபக்சே மீது வழக்கு தொடர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷே ஒரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வரையில் அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு (னுipடழஅயவiஉ ஐஅஅரnவைல) உள்ளதால், இந்த வழக்கு மேற்கொண்டு தொடரப்பட முடியாது என ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றம் கூறியிருந்தது.

அதையடுத்து, அமெரிக்க சட்ட வல்லுனர் புருஸ் பெய்ன், 'இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்க ராஜாங்க அமைச்சு ராஜதந்திர பாதுகாப்பு வழங்கியது தவறானது என, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மூவர் சார்பில் மனு செய்திருந்தார்.

அந்த மனுவும் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடர முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum