தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய்க்கு விரதமிருந்து தர்ப்பணம் செய்யுங்கள்

Go down

தாய்க்கு விரதமிருந்து தர்ப்பணம் செய்யுங்கள் Empty தாய்க்கு விரதமிருந்து தர்ப்பணம் செய்யுங்கள்

Post  ishwarya Mon Apr 29, 2013 12:52 pm

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் அளவை திதி என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்) பவுர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது.

(அன்று சந்திரரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்) அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15-வது பவுர்ணமி அன்று 180 ஆம் டிகிரியை அடைகிறது. சக்தியை (புவியீர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.

சூரியனை பித்ரு காரன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும், சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும், இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி தர்ப்பணம் செய்கிறோம்.

சூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியை வைத்திருப்பதும் ஆராய்ச்சிக்கு உகர்ந்தது. அமாவாசை, பவுர்ணமி அன்று முறையே சந்திர சங்கமத்தையும் சமசப்தமாக இருக்கும். மனித மதத்தின் மீது அமாவாசை, பவுர்ணமி திதிகளின் தாக்கம்.

அமாவாசை, பவுர்ணமி அன்று நிகழும் ஆகர்ஷண சக்தியின் வேறுபாடுகளை மனித இயல்புகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்குகின்றன. நமது ஆத்ம பெரும் மாறுதல்களை உண்டாக்குகின்றன. நமது ஆத்ம பலம் பெருகினால்தான் நம்மால் இந்த உலகில் சிறப்புடன் வாழ முடியும். கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும்.

அதனால்தான் சூரிய சந்திரர்களின் பலத்தைப் பெருக்கிக் கொள்வதால் வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது. அத்துடன் இச்சித்ரா பவுர்ணமி விரதத்தைக் கைக்கொள்வதன் மூலம் மறைந்து விட்ட தாயாரை ஆண்டு தோறும் நினைவுப்படுத்திக் கொள்ளவும் வழிகோலப்படுகின்றது.

தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று காலையில் எழுந்து புனித நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை மனதில் நினைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உண்ண வேண்டும்.

பாவ காரியங்களிலிருந்து நீங்கி மேலான புண்ணிய சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொளும் விதிமுறையை விரதங்கள் காட்டுகின்றன. உடலையும், உள்ளத்தையும் சீர் செய்யும் விரதங்கள் வழி கோலுகின்றன. திருவிளையாடற் புராணத்திலே சித்திரை விரதத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.

இந்நூலின் இந்திரன் சிவனை வணங்கித் தீவினைகள் நீங்கப்பெறான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மறைந்து விட்ட தாயாரை நினைவில் கொண்டு விரதமிருப்பதுடன் வாழ்வில் தவறுகள் தவிர்க்க நல்வழி செய்ய தூண்டுதல் செய்யும் புத்திரனார் விரதமிருப்பதும் இந்நாளின் சிறப்பை இரட்டிப்பாக்குகின்றது.

இந்நாளில் தமிழகத்தின் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூ
» பம்பா தர்ப்பணம்
»  விஷ்ணுபதி புண்ய கால தர்ப்பணம்
» காவிரித் தாய்க்கு சோதனை – தினமணி தலையங்கம்
» காவிரித் தாய்க்கு சோதனை – தினமணி தலையங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum