தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்

Go down

 நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்  Empty நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்

Post  gandhimathi Mon Jan 21, 2013 6:09 pm




* தை மாதம் 1-ந்தேதி (15-1-12) பொங்கல் வைக்க காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை நல்ல நேரம்.

* பிப்ரவரி மாதம் 13-ந்தேதி (மாசி 1-ந்தேதி) சபரிமலையில் 6 நாட்கள் நடை திறக்கப்படும்.

* மார்ச் மாதம் 14-ந்தேதி (பங்குனி 1-ந்தேதி) காரடையான் பூஜை செய்வதற்கு காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நல்ல நேரம்.

* மார்ச் 24-ந்தேதி குச்சனூர் சனி பகவானை ஆராதனை செய்வது வழிபடுவது மிகவும் நல்லது.

* மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் 11 நாட்கள் சபரிமலையில் நடை திறந்து இருக்கும்.

* ஏப்ரல் 1-ந்தேதி புதுக்கணக்கு தொடங்க மிகவும் நல்ல நாள். புதுக்கணக்கை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் எழுதுவது நல்லது.

* மார்ச் 5-ந்தேதி சபரிமலையில் ஆராட்டு விழா நடைபெறும்.

* ஏப்ரல் 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அட்சய திரிதியை அன்று நாள் முழுவதும் அமிர்த யோகம். எனவே உங்கள் வசதிக்கு ஏற்ற நேரத்தில் நகைகள் வாங்கலாம்.

* மே 2-ந்தேதி மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

* மே 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28-ந்தேதி அக்னி நட்சத்திரம் முடிகிறது.

* மே 5-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி.

* மே 6-ந்தேதி வைகையில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

* மே 14-ந்தேதி (வைகாசி 1-ந்தேதி) முதல் சபரிமலையில் 6 நாட்கள் நடை திறந்திருக்கும்.

* ஜுன் 1-ந்தேதி பழனி முருகன் திருக்கல்யாணம் நடைபெறும்.

* ஜுன் 6-ந்தேதி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் தேரோட்டம் நடைபெறும்.

* ஜுன் 14-ந்தேதி (ஆனி) முதல் 6 நாட்கள் நடை திறந்திருக்கும்.

* ஜுலை 15-ந்தேதி (ஆடி) முதல் 6 நாட்கள் சபரிமலையில் நடை திறந்திருக்கும்.

* ஜுலை 16-ந்தேதி தட்சிணாயண புண்ணிய காலமாகும்.

* ஜுலை மாதம் 22-ந்தேதி நாகசதுர்த்தி மறு நாள் 23-ந்தேதி கருட பஞ்சமி.

* ஆகஸ்டு 1-ந்தேதி சங்கரன் கோவில் ஆடித்தபசு காட்சி.

* ஆகஸ்டு 29-ந்தேதி ஓணம் பண்டிகை.

* செப்டம்பர் மாதம் 16-ந்தேதி முதல் 6 நாட்கள் நடை திறந்திருக்கும்.

* அக்டோபர் 1-ந்தேதி மகாளயபட்சம் தொடங்குகிறது. 15-ந்தேதி மகாளய அமாவாசை பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள்.

* அக்டோபர் 16-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. 23-ந்தேதி ஆயுத, சரஸ்வதி பூஜை, அன்று பூஜை செய்ய காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை மிகவும் நல்ல நேரமாகும்.

* அக்டோபர் 27-ந்தேதி பக்ரீத்- அன்று திருநள்ளாறு சனிபகவானை வழிபடுவது நல்லது.

* அக்டோபர் 29-ந்தேதி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். * நவம்பர் 2-ந்தேதி கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாளாகும்.

* நவம்பர் 2-ந்தேதி முதல் 2 நாட்கள் சபரிமலையில் நடை திறந்து இருக்கும். * நவம்பர் 13-ந்தேதி தீபாவளியன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை கங்கா ஸ்நானம் செய்ய மிகவும் உகந்த நேரமாகும்.

* நவம்பர் 15-ந்தேதி சபரிமலை கோவில் 42 நாள் நடை திறக்கப்படும்.

* நவம்பர் 16-ந்தேதி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிய வேண்டிய நாளாகும்.

* டிசம்பர் 3-ந்தேதி சிவன் கோவிலில் சங்காபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவது மிகவும் நல்லது.

* டிசம்பர் 16-ந்தேதி மார்கழி பூஜை தொடங்க வேண்டும்.

* டிசம்பர் 18-ந்தேதி சிவாலயங்களுக்கு சென்று ஆருத்ரா தரிசனம் காண்பது மிகுந்த பலன்களைத் தரும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum