தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விவாகரத்துக்கு பின் புது வாழ்க்கை: வில்லன் நடிகரை காதலிக்கிறேன்- மீரா வாசுதேவன் பேட்டி

Go down

விவாகரத்துக்கு பின் புது வாழ்க்கை: வில்லன் நடிகரை காதலிக்கிறேன்- மீரா வாசுதேவன் பேட்டி Empty விவாகரத்துக்கு பின் புது வாழ்க்கை: வில்லன் நடிகரை காதலிக்கிறேன்- மீரா வாசுதேவன் பேட்டி

Post  ishwarya Wed Apr 24, 2013 5:56 pm

“உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது குடும்ப வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கோர்ட்டில் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துள்ளனர்.

மீரா வாசுதேவனுக்கும் வில்லன் நடிகர் ஜான் கோக்கனுக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஜான் கோக்கன் கேரளாவை சேர்ந்தவர். மோகன்லால் படங்களில் நடித்துள்ளார். கன்னட திரையுலகிலும் பிரபல வில்லன் நடிகராக உள்ளார். ஆணழகன் போட்டியில் பங்கேற்றவர்.

ஜான் கோக்கனுடன் காதல் ஏற்பட்டது பற்றி மீரா வாசுதேவன் கூறியதாவது:-

இண்டர்நெட் மூலம்தான் முதலில் எங்களுக்கு தொடர்பு ஏற்பட்டது. எனது “பேஸ் புக்கிங்” ஜான் கோக்கன் தொடர்பு கொண்டு “ஹலோ” சொன்னார். பிறகு என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார். முதலில் அதை விரும்பவில்லை. பிறகு மனம் மாறி அவருடன் தொடர்பு கொண்டேன்.

அதற்கு முன்பாகவே இண்டர்நெட்டில் அலசி அவரது படங்களை பார்த்தேன். அவரது திறமைகள், நடிக்கும் படங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டேன். அதன் பிறகுதான் பேசினேன். நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தோம். முதன் முதலில் விமான நிலையத்தில்தான் எங்கள் சந்திப்பு நடந்தது. இரு கன்னட படங்கள் சூட்டிங்கை முடித்து விட்டு திரும்பிய அவரை அழைத்து வருவதற்காக விமான நிலையம் போனேன்.

விமான நிலையத்தில் என்னை அழைத்து போக வந்த முதல் “கேர்ள் பிரண்ட்” நீங்கள்தான் என்றார். என் வாழ்வில் திருப்பம் ஏற்படுத்துபவராக அவர் இருப்பார் என்பதை அப்போதே உணர்ந்து கொண்டேன்.

பின்னர் தினமும் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் ஒன்றாக பயணம் செய்தோம். விரைவிலேயே என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டார். நிறைய இடங்களுக்கு ஒன்றாக சென்று சுற்றி பார்த்தோம்.

முதல் கணவருடன் சமீபத்தில்தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது. அவரது வாழ்க்கை நன்றாக அமையட்டும். புது காதலால் எனது வாழ்க்கை தற்போது சந்தோஷமாக மாறி இருக்கிறது.

தமிழ் தெலுங்கில் நான் நடித்த “ஆட்ட நாயகன்” படம் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாசுடனும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பிரகாஷ்ராஜ் மகளாக வருகிறேன். என் வாழ்க்கை ஜான் கோக்கன் வரவால் அழகாக மாறி இருக்கிறது.

இவ்வாறு மீரா வாசுதேவன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புது காதலர் கிடைத்து விட்டார்: “விவாகரத்துக்கு பின் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – மீரா வாசுதேவன்
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» விவாகரத்துக்கு பின் நிறைய வாய்ப்புகள்! சோனியா அகர்வால்
» திருமணத்துக்கு பின் சினிமாவுக்கு முழுக்கா?- சினேகா பேட்டி
» தமிழகத்தில் புது எழுச்சி… மாற்றம் வரும்! – விஜய் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum