தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் விளம்பர படப்பிடிப்பு நயன்தாராவுக்கு பாதுகாப்பு: பெண்கள் சங்கம் மிரட்டலால் நடவடிக்கை

Go down

சென்னையில் விளம்பர படப்பிடிப்பு நயன்தாராவுக்கு பாதுகாப்பு: பெண்கள் சங்கம் மிரட்டலால் நடவடிக்கை Empty சென்னையில் விளம்பர படப்பிடிப்பு நயன்தாராவுக்கு பாதுகாப்பு: பெண்கள் சங்கம் மிரட்டலால் நடவடிக்கை

Post  ishwarya Wed Apr 24, 2013 11:49 am



நயன்தாரா-பிரபுதேவா காதல் தீவிரமாகி உள்ளது. இருவரும் திருமணத்துக்கு தயாராகின்றனர். திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

பிரபுதேவா மனைவி ரம்லத் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பெண்கள் சங்கங்களும் கண்டித்து உள்ளன. நயன்தாராவுக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக நேற்று நயன்தாரா சென்னை வந்தார். ரகசிய இடத்தில் தங்கி இருந்தார். கேளம்பாக்கத்தில உள்ள ஒரு ஸ்டுடியோவில் இன்று காலை படப்பிடிப்பு தொடங்கியது. அதில் பங்கேற்று நடித்தார். 3 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. சென்னையில் உள்ள பிரபல ஜவுளி விற்பனை நிறுவனம் இந்த விளம்பர படத்தை தயாரிக்கிறது.

நயன்தாரா விளம்பர படங்களில் இதுவரை நடித்தது இல்லை. பெரிய நிறுவனங்கள் அவரை அணுகிய போதெல்லாம் மறுத்து வந்தார். தற்போது முதல் தடவையாக விளம்பர படத்தில் நடிக்கிறார்.

பிரபுதேவா செலவுகளை நயன்தாரா கவனித்து கொள்வதாக செய்திகள் பரவியுள்ளன. இதனால் அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான் விளம்பர படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கின்றனர்.

படப்பிடிப்பில் ரம்லத் மற்றும் பெண்கள் சங்கத்தினர் புகுந்து ரகளையில் ஈடுபடலாம் என யூகம் நிலவுகிறது. எனவே நயன்தாராவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் படப்பிடிப்பை சுற்றி நிறுத்தப்பட்டு உள்ளனர்.

பிரபுதேவா “உருமி” படத்தில் நடிக்க ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார். ஓரிரு நாட்களில் அவரும் சென்னை வருகிறார். ரம்லத்திடம் திருமணத்துக்கு சம்மதம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர் சம்மதிப்பாரா என்று உறுதியாக தெரியவில்லை.

ரம்லத்துக்கு ரூ.3 கோடியும், அண்ணாநகரில் உள்ள வீட்டையும் கொடுத்து சமரசம் செய்து விட்டதாக ஏற்கனவே வதந்தி பரவியது. நயன்தாரா ரூ.85 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை பிரபுதேவா மூலம் ரம்லத்துக்கு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதையெல்லாம் ரம்லத் மறுத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நயன்தாராவுக்கு சம்மன் அனுப்பியது நடிகர் சங்கம்!
» ஐஸ் மீது நடவடிக்கை எடுக்குமா நடிகர் சங்கம்?
» குறுந்தகவல் மோசடிகள்! அரசாங்க நடவடிக்கை அவசியமாகிறது!பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
» அசின் மீது நடவடிக்கை என்ன… நாளை முடிவு செய்கிறது நடிகர் சங்கம்!
» சென்னையில் இயக்குனர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா: ரஜினி, கமல் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum