தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாராவுடன் விரைவில் திருமணம் – மனைவி ரம்லத்தை பிரிந்தார் பிரபுதேவா – வீட்டுக்கு வர மறுப்பு

Go down

நயன்தாராவுடன் விரைவில் திருமணம் – மனைவி ரம்லத்தை பிரிந்தார் பிரபுதேவா – வீட்டுக்கு வர மறுப்பு Empty நயன்தாராவுடன் விரைவில் திருமணம் – மனைவி ரம்லத்தை பிரிந்தார் பிரபுதேவா – வீட்டுக்கு வர மறுப்பு

Post  ishwarya Wed Apr 24, 2013 11:46 am

நயன்தாராவுடன் திருமண ஏற்பாடு நடப்பதால் வீட்டுக்கு வருவதை பிரபுதேவா நிறுத்தி விட்டார். மனைவி ரம்லத் அழைத்தும் வர மறுத்து விட்டார்.

அண்ணா நகரில் பிரபு தேவாவுக்கு சொந்தமாக வீடு உள்ளது. தரை தளத்தில் உள்ள வீடு பிரபுதேவா பெயரிலும் முதல் தள வீடு ரம்லத் பெயரிலும் உள்ளது. தரை தளம் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மாடியில்தான் மனைவி குழந்தைகளுடன் வசித்தார்.

முதல் குழந்தை உடல் நலம் இல்லாமல் இருந்த போது ராஜ அண்ணாமலைபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். அந்த குழந்தை இறந்த போது பிரபுதேவாவுக்கு ஆறுதல் சொல்ல அவ் வீட்டுக்கு நயன்தாரா வந்தார்.

அதன் பிறகு வாடகை வீட்டை காலி செய்து விட்டு அண்ணா நகரில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்தார்கள்.

வெளியூர் படப்பிடிப்புக்கு செல்லும்போது தினமும் போன் செய்து மனைவியிடம் பேசுவது உண்டு. குழந்தைகளுடனும் அன்பொழுக பேசுவார். படப்பிடிப்பு முடிந்ததும் உடனேயே வீட்டுக்கு புறப்பட்டு வந்து விடுவார்.

ஆனால் தற்போது அவர் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் ஆகிறது. நயன் தாராவை திருமணம் செய்யப்போவதாக அறிவித்ததில் இருந்து வீட்டுக்கு போவதை நிறுத்தி விட்டார். ரம்லத் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. ரம்லத் நம்பரை பார்த்ததும் எடுக்க மறுக்கிறாராம். உறவினர்களை அவரிடம் தொடர்பு கொண்டு பேச வைத்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனாலும் வரவில்லை.

“உருமி” படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. சந்தோஷ்சிவன் இயக்கும் இப்படத்தில் பிருதிவிராஜூம், பிரபு தேவாவும் இணைந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட சென்னை வரவில்லை. ஐதராபாத்திலேயே நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்குகிறார். நயன்தாராவும் அவருடன் தான் தங்குகிறார்.

நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்ததை ரம்லத் கடுமையாக அறிக்கைகள் விட்டு கண்டிக்கவில்லை. போலீசில் புகார் அளிக்கவில்லை. போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஆனாலும் வீட்டுக்கு வருவதை தவிர்க்கிறார்.

ரம்லத் மவுனமாக இருப்பது பிரபுதேவாவுக்கு தெம்பூட்டியுள்ளது என்கின்றனர். எனவே தான் பயம் போய் ரம்லத்தை கை கழுவும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum