தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வனிதா என் மகள் என்று சொல்லவே வேதனையாக இருக்கிறது – விஜயக்குமார் ஆவேசம்

Go down

வனிதா என் மகள் என்று சொல்லவே வேதனையாக இருக்கிறது – விஜயக்குமார் ஆவேசம் Empty வனிதா என் மகள் என்று சொல்லவே வேதனையாக இருக்கிறது – விஜயக்குமார் ஆவேசம்

Post  ishwarya Tue Apr 23, 2013 12:38 pm

நாம் பிள்ளைகளை பெற்று வளர்த்தவர்கள். நம்மைப் போல அவர்களும் பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கும் போதுதான் அந்த வலியை உணர்வார்கள். இதற்குமேல் என் பெற்ற மனமும் பெருகும் கண்ணீரும் வார்த்தைகளை சொல்ல இடம் கொடுக்கவில்லை என்று மகள் வனிதாவின் சரமாரி புகார்கள் குறித்து கூறியுள்ளார் நடிகர் விஜயக்குமார்.

நடிகர் விஜயக்குமார், அவரது மகனும் நடிகருமான அருண் விஜய், சகோதரிகள் ஸ்ரீதேவி, ப்ரீதா, ப்ரீதாவின் கணவரான இயக்குநர் ஹரி ஆகியோர் மீது சரமாரியான புகார்களை சுமத்தியுள்ளார் முன்னாள் நடிகையும், விஜயக்குமாரின் மகளுமான வனிதா.

மேலும் விஜயக்குமார் வீட்டில் அசிங்கமான, சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. அதையெல்லாம் சொன்னால் நாறிப் போய் விடும். அவற்றையெல்லாம் நான் வாராவாரம் சொல்வேன் என்றும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

தன்னை விஜயக்குமாரும்,அருண் விஜய்யும் அடித்து உதைத்ததாக டிஜிபியிடமும் நேரில் புகார் கொடுத்துள்ளார். மதுரவாயல் போலீஸார் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.

மகள் வனிதாவின் இந்த அதிரடி ஆவேச புகார்கள் குறித்து விஜயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

வனிதா என் பெயரை கெடுக்கிறார். பிள்ளைகளை பெத்து வளர்த்து ஆளாக்குவது பெற்ற தாய், தந்தையர் பெயரையும் குடும்பத்தின் பெயரையும் காப்பாற்றுவதற்குத்தான். அந்த பெயரை கெடுப்பதற்காக அல்ல. நடந்ததை மறைத்து நடக்காத ஒன்றை நடந்ததை போல் செய்தி வெளியிட்டு என்னையும், என் மகன் அருண்விஜய்யையும் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் என்மேல் அன்பு கொண்ட அனைவரின் மனதையும் புண்படுத்தி இருக்கிறார் வனிதா.

வனிதா என் மகள் என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு வேதனையிலும், வெட்கத்திலும் இருக்கிறேன். இதுக்கு மேல் என் குடும்பத்துக்கும், வனிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இனியும் இதுபோல தவறான செய்தியை வனிதா வெளியிட்டாலோ, தன்னோட சுயலாபத்துக்காக என் பெயரை பயன்படுத்தினாலோ அவர் மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

நாம் பிள்ளைகளை பெற்று வளர்த்தவர்கள். தம்மைப் போல அவங்களும் பிள்ளைகளை பெத்து வளர்த்து ஆளாக்கும் போதுதான் அந்த வலியை உணர்வார்கள். இதற்குமேல் என் பெற்ற மனமும் பெருகும் கண்ணீரும் வார்த்தைகளை சொல்ல இடம் கொடுக்க வில்லை என்றார் அவர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் கணவர் மீதான வழக்கை விஜயக்குமார் வாபஸ் பெற்றால் சமரசம் பேசத் தயார் – வனிதா
» ஐட்டம் கேர்ள் என்று சொல்லக் கூடாது – லட்சுமி ராய் ஆவேசம்
» அப்பனாவது ; ஆத்தாளாவது… வனிதா விஜயகுமார் ஆவேசம்!
» என் மகனை தராவிட்டால் தற்கொலை செய்வேன்! – வனிதா ஆவேசம்
» மதுவுக்கு அடிமையான மஞ்சுளா… விபச்சாரம் பற்றிப் பேச அருகதையில்லாத விஜயகுமார்! – மகள் வனிதா அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum