தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அயோத்தி, நேற்று வரை

Go down

அயோத்தி, நேற்று வரை Empty அயோத்தி, நேற்று வரை

Post  oviya Fri Apr 19, 2013 7:10 pm

விலைரூ.90
ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அயோத்தி, நேற்று வரை : நூலாசிரியர்: என்.சொக்கன். வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 215)

இந்நூலின் நோக்கம், சார்பற்ற முறையில் அயோத்திப் பிரச்னையை அணுகி சரித்திர உண்மைகளைத் தருவதே என்று பதிப்பாசிரியர் கூறுகிறார்.

கி.பி.1526ல் பாபர் இந்தியாவுக்குள் வந்த காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறார் ஆசிரியர். பாபரின் தினசரி நாள் குறிப்பான பாபர் நாமாவில் அயோத்தியில் மசூதி கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற பகுதி தொலைந்து போய்விட்டது. அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக ஓர் இந்து கோவில் இடிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை (பக்.22).

பிரிட்டிஷார் காலத்திலும் கலவரங்கள் தொடர்ந்தன. இதை ஒத்த விஷயங்களை துல்லியமாக வெளிப்படுத்தி அத்துடன் அயோத்தி நகரைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய இலக்கியங்கள், புராணங்கள் முதலியவைகளைப் பற்றித் தெளிவாகவும் முழுமையாகவும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்துக் காட்டியுள்ளார்.

ராமரின் வாழ்க்கை சரிதத்தைப் பற்றிப் பல அறிஞர்களின் கருத்துக்களை ஆசிரியர் தொகுத்துக் கொடுத்துள்ளார் (பக்.74-78).

நடந்த சம்பவங்களை, ஒரு வரலாற்று ஆவணத்தை ஒத்த வகையில், ஆசிரியர் நடந்தபடியே எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியா மதச்சார்பற்ற நாடு. பாபர் மசூதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்தார்.

1992 டிசம்பர் 6ம் தேதி சம்பவத்தை படம் பிடிக்கிறார். மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகளை லீபர்ஹான் கமிஷன் விசாரித்து வருகிறது எந்த முடிவுக்கும் வர முடியாமல் நீதிமன்றங்கள் திணறுகின்றன என்கிறார் ஆசிரியர். இத்துடன் மும்பைக் கலவரம் பற்றியும் விளக்கிய பாங்கும் ஆசிரியரின் கடின முயற்சியைக் காட்டுகிறது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum