தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீட்டை காலி செய்தார் ஸ்ரேயா!

Go down

வீட்டை காலி செய்தார் ஸ்ரேயா! Empty வீட்டை காலி செய்தார் ஸ்ரேயா!

Post  ishwarya Tue Apr 16, 2013 1:13 pm

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘ரௌத்திரம்’ படத்தைதான் பெரிதும் எதிர்ப்பார்த்தார் ஸ்ரேயா. நல்ல கதாபாத்திரம் அமைந்தும் படம் படுதோல்வி அடைந்ததால் ஸ்ரேயாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து போனது. இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்த ஆடம்பரமான வாடகை பங்களாவை காலி செய்தார் ஸ்ரேயா. தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18′ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா.

ஆனால் அவரை தமிழில் நாயகியாக அடையாளம் காட்டி திருப்புமுனை தந்த படம் ‘மழை’. மழை’ வரவேற்பை பெறாவிட்டாலும், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜோடியாக ‘சிவாஜி’, தனுஷ் ஜோடியாக ‘திருவிளையாடல் ஆரம்பம்’, விஜய் ஜோடியாக ‘அழகிய தமிழ்மகன்’, விக்ரம் ஜோடியாக ‘கந்தசாமி’, விஷால் ஜோடியாக ‘தோரணை’, சரத்குமார் மகளாக ‘ஜக்குபாய்’, ஆர்யா ஜோடியாக ‘சிக்கு புக்கு’ என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

ஆனால் ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதன் பின்பு இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனால் மீண்டும் தெலுங்கு, இந்தி திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது தமிழில் வாய்ப்புகள் சுத்தமாக இல்லாத நிலையிலேயே ஸ்ரேயா சென்னையை காலி செய்ய வேண்டிய நிலை வந்துவிட்டது என்கிறார்கள், அவரது மக்கள் தொடர்பாளர் வட்டாரத்தில். ஆனால் தமிழில் ஸ்ரேயாவுக்கு கனவுக் கதாபாத்திரங்கள் என்று எதுவும் அமையவில்லை என்பதுதான் சோகம். அடடா! ஓஹோனு ஆரம்பிச்சு இப்புடி மூட்ட முடிச்ச கட்ற நெலமைக்கு ஆகிப்போச்சே அம்ணி…..

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum