தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனது மார்புகளை அழுத்திப்பிடித்து படுக்கைக்கு அழைத்தார் சரன் : சோனா பரபரப்பு வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)

Go down

எனது மார்புகளை அழுத்திப்பிடித்து படுக்கைக்கு அழைத்தார் சரன் : சோனா பரபரப்பு வாக்குமூலம் (வீடியோ இணைப்பு) Empty எனது மார்புகளை அழுத்திப்பிடித்து படுக்கைக்கு அழைத்தார் சரன் : சோனா பரபரப்பு வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)

Post  ishwarya Tue Apr 16, 2013 11:44 am


மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது நடிகை சோனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். பத்துக்கு பத்து, குரு என் ஆளு, குசேலன், கோ உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா. சமீபத்தில் கனிமொழி என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சோனாவும், இயக்குநர் வெங்கட்பிரபுவும் நண்பர்கள். வெங்கட்பிரபு டைரக்ஷனில், சோனா ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசில் சோனா பாலியல் புகார் கொடுத்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண். உன்னை சரண் அடைந்தேன், சென்னை-28, மழை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை சொந்தமாக தயாரித்துள்ளார். உன்னை சரண் அடைந்தேன் படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக நடித்தும் இருக்கிறார்.

மங்காத்தா பார்ட்டியில்…

இதுகுறித்து சோனா நிருபர்களிடம் கூறுகையில், “மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித்திருந்த வைபவ் வீட்டில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு, ‘பார்ட்டி’ நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட ‘மங்காத்தா’ படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரணும் அந்த ‘பார்ட்டி’க்கு வந்திருந்தார். வெங்கட்பிரபு என் நண்பர் என்பதால், என்னையும் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்று நானும் ‘பார்ட்டி’யில் கலந்துகொண்டேன்.

அங்கு மது விருந்து நடந்தது. திடீரென்று எஸ்.பி.சரண் என் மீது பாய்ந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் வெட்கத்தாலும், அதிர்ச்சியாலும் கூனிக் குறுகி போய்விட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் ஒரு கவர்ச்சி நடிகைதான். பிழைப்புக்காக நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். ஆனால், நான் விலை மாது அல்ல. ஏற்கனவே ஒருமுறை, எஸ்.பி.சரண் என்னிடம் தவறாக பேசினார். அதில் இருந்து நான் அவருடன் பேசுவதில்லை.

இதுபற்றி நான் பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன். போலீஸ் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, எடுக்கட்டும். அதோடு எஸ்.பி.சரண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்னும் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார்’’ என்று கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக சோனா நேற்று இரவு பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுவை சந்தித்து புகார் கொடுத்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கமிஷனரிடம் வீடியோ ஆதராம் கொடுத்தார் சோனா: பரபரப்பு பேட்டி
»  மது விருந்தின்போது உல்லாசத்துக்கு அழைத்தார்: எஸ்பிபி சரணுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது – சோனா மனு
»  தற்கொலை வழக்கு: நடிகை நிலா பரபரப்பு வாக்குமூலம்.!
» பாலியல் புகார்: வீடியோ ஆதாரத்தை சோனா தரவில்லை – போலீசார் மறுப்பு
» ‘உச்சிதனை முகர்ந்தால்’ படக்குழுவினருடன் சந்திப்பு (வீடியோ இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum