நவதானிய மோர்க்குழம்பு
Page 1 of 1
நவதானிய மோர்க்குழம்பு
தேவையான பொருள்கள்:
நவதானியம் = 1 கப்
புளி = எலுமிச்சை அளவு
தயிர் = 1 கப்
மிளகாய் பொடி = ஒன்றரை கப்
தனியா பொடி = 3 ஸ்பூன்
சீரகப்பொடி = அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2
சின்ன வெங்காயம் = 50 கிராம்
இஞ்சி = சிறு துண்டு
பூண்டு = 4 ஸ்பூன்
வெந்தயம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
நவதானியத்தை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் அலசி வடிகட்டவும். இஞ்சி, பூண்டை உரித்து விழுதாக அரைக்கவும்.
நவதானியத்தில் இந்த இஞ்சி, பூண்டு விழுதை கலந்து சீரகப்பொடி, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேக விடவும். இதை தனியே வைக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டவும். அதில் தனியா பொடி, மிளகாய் பொடி, சிறிது மஞ்சள் பொடி கலந்து உப்பை போடவும். சின்ன வெங்காயம் உரித்துக் கொண்டு பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். அத்தோடு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வெந்த நவதானியத்தைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் குழம்பை சேர்த்து மூடி கொதிக்க விடவும். இடையே கிளறி விடவும்.
இறக்கும் போது கெட்டி தயிர் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தேவையானால் சிறிது வெல்லமும் சேர்க்கலாம். கொத்தமல்லி தூவவும்.
சுவையான நவதானிய மோர்க்குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
நவதானியத்தில் வைட்டமின் B, வைட்டமின் E மற்றும் தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.
இதனால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் நீரிழிவை குறைக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம், மலச்சிக்கல் மற்றும் மற்ற செரிமான கோளாறுகள், எடையை கட்டுப்படுத்துகிறது.
நவதானியம் = 1 கப்
புளி = எலுமிச்சை அளவு
தயிர் = 1 கப்
மிளகாய் பொடி = ஒன்றரை கப்
தனியா பொடி = 3 ஸ்பூன்
சீரகப்பொடி = அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2
சின்ன வெங்காயம் = 50 கிராம்
இஞ்சி = சிறு துண்டு
பூண்டு = 4 ஸ்பூன்
வெந்தயம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
நவதானியத்தை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் அலசி வடிகட்டவும். இஞ்சி, பூண்டை உரித்து விழுதாக அரைக்கவும்.
நவதானியத்தில் இந்த இஞ்சி, பூண்டு விழுதை கலந்து சீரகப்பொடி, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேக விடவும். இதை தனியே வைக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டவும். அதில் தனியா பொடி, மிளகாய் பொடி, சிறிது மஞ்சள் பொடி கலந்து உப்பை போடவும். சின்ன வெங்காயம் உரித்துக் கொண்டு பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். அத்தோடு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வெந்த நவதானியத்தைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் குழம்பை சேர்த்து மூடி கொதிக்க விடவும். இடையே கிளறி விடவும்.
இறக்கும் போது கெட்டி தயிர் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். தேவையானால் சிறிது வெல்லமும் சேர்க்கலாம். கொத்தமல்லி தூவவும்.
சுவையான நவதானிய மோர்க்குழம்பு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
நவதானியத்தில் வைட்டமின் B, வைட்டமின் E மற்றும் தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.
இதனால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் நீரிழிவை குறைக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம், மலச்சிக்கல் மற்றும் மற்ற செரிமான கோளாறுகள், எடையை கட்டுப்படுத்துகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» நவதானிய மோர்க்குழம்பு
» நவதானிய மோர்க்குழம்பு
» வாழைத்தண்டு நவதானிய கூட்டு
» வாழைத்தண்டு நவதானிய கூட்டு
» மோர்க்குழம்பு
» நவதானிய மோர்க்குழம்பு
» வாழைத்தண்டு நவதானிய கூட்டு
» வாழைத்தண்டு நவதானிய கூட்டு
» மோர்க்குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum