தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு

Go down

ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு Empty ஒன்பது நாள் போயிருச்சு. இன்னும் ஒருநாள்தான் – சரணுக்கு சோனா வைத்த கெடு

Post  ishwarya Fri Apr 12, 2013 5:57 pm



ஏன் இப்படி நடந்து கொள்கிறார் சோனா என்பதை இன்று நமது இணையதளத்தில் வெளியான வேறொரு கட்டுரையில் வெளியிட்டிருக்கிறோம் (அந்த கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்). சம்பவத்திற்கு ஆதாரத்தை அவர் பின்பு எப்படி திரட்டினார் என்பதையும் கூறியிருந்தோம். இந்த நிலையில் இன்று காலை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார் சோனா. அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பின்னர் சோனா நிருபர்களிடம் கூறுகையில், “எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். இன்று கமிஷனரை சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன். வீடியோவை எனது லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதனை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டும் விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன்,” என்றார்.

அவரிடம், “இயக்குனர் வெங்கட் பிரபு உங்களுடன் சமரச பேச்சில் ஈடுபட்டாரா?” என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு சோனா, “இரண்டு முறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம் என்று அறிக்கை விடுமாறு சரண் தரப்பில் என்னிடம் வற்புறுத்தப்பட்டது. நான் ஏன் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கேட்டேன். இதனால் சமரச பேச்சு வெற்றி பெறவில்லை. சரண் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லா விட்டால் நான் விடமாட்டேன்,” என்றார்.

“வீடியோ ஆதாரம் மது விருந்தில் எடுக்கப்பட்டதா?” என்று கேட்டபோது, “அது பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது. பத்து நாட்களுக்குள் சரண் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. நாளை பார்ப்போம்,” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சொந்த வாழ்க்கையை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி படமா காட்டறேன்! – சோனா
» சோனா பாலியல் பலாத்கார வழக்கு: எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்
»  மது விருந்தின்போது உல்லாசத்துக்கு அழைத்தார்: எஸ்பிபி சரணுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது – சோனா மனு
» விஜய் படங்களால் ரூ.30 கோடி நஷ்டம்-சரிகட்ட ஜூன் வரை ‘கெடு’!
» முதல் நாள் பிரியாணி :அடுத்த நாள் பட்டினி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum