தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை வரம் அருளும் புத்திர காமேஸ்வரர்

Go down

குழந்தை வரம் அருளும் புத்திர காமேஸ்வரர் Empty குழந்தை வரம் அருளும் புத்திர காமேஸ்வரர்

Post  gandhimathi Sun Jan 20, 2013 2:17 pm




திருவண்ணாமலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரணியில் அமைந்துள்ளது புத்திர காமேஸ்வரர் கோவில். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து நற்பேறு பெற்றுச் செல்கின்றார்கள். குழந்தை செல்வம் விரும்பும் பெண்கள் தொடர்ந்து 5 திங்கட்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.

ஆறாவது திங்களன்று காலை எதுவும் சாப்பிடாமல் இங்கு வரவேண்டும். பிறகு இங்குள்ள `நாகநதி' என்ற ஆற்றில் குளித்து விட்டு, ஆற்றங்கரையில் இருக்கும் வேம்புடன் கூடிய அரச மரத்தை வலம் வரவேண்டும். அந்த மரத்தடியில் இருக்கும் நாகர் சிலைகளை வணங்கிவிட்டு புத்திரக் காமேஸ்வரர் சன்னதிக்குச் சென்று வழி பட வேண்டும்.

மேலும், இக்கோவிலில் வில்வமரம் ஒன்றும் இருக்கிறது. அந்த மரத்தில் பறித்த வில்வ இலைகளைக் கொண்டு, புத்திரக் காமேஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டால் குழந்தை பாக்கியம் விரைவில் அமையும் என்கிறார்கள், இங்கு வரும் பக்தர்கள்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum