தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதர்வாவை பாலா தேர்ந்தெடுத்தது ஏன்? புதிய தகவல்கள்!

Go down

அதர்வாவை பாலா தேர்ந்தெடுத்தது ஏன்? புதிய தகவல்கள்! Empty அதர்வாவை பாலா தேர்ந்தெடுத்தது ஏன்? புதிய தகவல்கள்!

Post  ishwarya Thu Apr 11, 2013 5:27 pm

தனது புதிய படத்தில் நடிக்க, நடிகரும், நடிகர் முரளியின் மகனுமான அதர்வாவை தேர்ந்தெடுத்தது ஏன்? என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக தன் சொந்தக் கதைகளை மட்டுமே இயக்கும் பாலா இந்த முறை மலையாள நாவல் ஒன்றைப் படமாக்குகிறார். பாலாவின் படங்களில் பிரபலமான எழுத்தாளர்கள் பணியாற்றினாலும், அவர்களை வசனம் எழுத மட்டுமே அவர் பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் அவன் இவன் படம் சொல்லிக் கொள்ளுமளவு போகாத காரணத்தால், இந்தமுறை அவர் ஒரு நாவலைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மலையாளத்தில் வெளியான நாவல் ஒன்றை தமிழில் எரியும் தணல் எனும் பெயரில் மொழி பெயர்த்துள்ளனர். இந்த நாவலைத்தான் சினிமாவாக எடுக்கிறார் பாலா. இரண்டு குழந்தைகளின் பெற்றோர் படும் பாடுகளை சொல்லும் கதை இது.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தக் கதையில், கமர்ஷியல் ஹீரோக்கள் நடித்தால் சரிவராது என்பதால், தனது வழக்கமான நாயகர்களை விட்டுவிட்டு அதர்வாவை நாயகனாக்கியிருக்கிறாராம் பாலா. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் சூட்டிங்கை தொடங்கவிருக்கிறார் பாலா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum