தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்வதேச படங்களுக்கு வசந்தபாலன் புகழாரம்!

Go down

சர்வதேச படங்களுக்கு வசந்தபாலன் புகழாரம்! Empty சர்வதேச படங்களுக்கு வசந்தபாலன் புகழாரம்!

Post  ishwarya Thu Apr 11, 2013 2:18 pm

சென்னையில் சர்வதேச பட விழாவை தொடங்கி வைத்த டைரக்டர் வசந்தபாலன், சர்வதேச படங்களை பார்த்ததால்தான் தன்னால் வெற்றி இயக்குனர் ஆக முடிந்தது என்று கூறினார்.

செவன்த்சேனல் நிறுவனமும், தமிழ் பிலிம் அகடாமியும் இணைந்து சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச பட விழாவை நடத்தி வருகின்றன. 8வது ஆண்டாக சர்வதேச பட விழா, சென்னையில் தொடங்கியது. தொடக்க விழா, சென்னை தியாகராயநகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் நடந்தது. விழாவில், டைரக்டர் வசந்தபாலன் கலந்து கொண்டு சர்வதேச பட விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, “நடுத்தர நகரமான விருதுநகரில் இருந்து சென்னைக்கு வந்தவன், நான். என் முதல் படம், `ஆல்பம் தோல்வி அடைந்தபோது, சென்னையில் சர்வதேச படவிழா நடந்தது. அதில் திரையிடப்பட்ட படங்களை பார்த்தபின்தான் படங்களை பற்றிய என் கோணம் மாறியது. “அங்காடி தெரு”, “அரவான்” படங்கள் உருவானது அப்படித்தான். அதற்காக, நான் சர்வதேச படங்களை பார்த்து, `காப்பி அடிக்கவில்லை. படங்களை பற்றிய பார்வையையும், கோணங்களையும் மாற்றக்கூடிய சக்தி, சர்வதேச படங்களுக்கு இருக்கிறது, என்று கூறினார்.

முன்னதாக, நடிகை தன்ஷிகா குத்துவிளக்கு ஏற்றினார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சர்வதேச பட விழாவுக்கான ஒருங்கிணைப்பாளர் குளோரியானா, செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum