தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இறைவனை பூஜை செய்யும் முறை

Go down

இறைவனை பூஜை செய்யும் முறை Empty இறைவனை பூஜை செய்யும் முறை

Post  gandhimathi Sun Jan 20, 2013 1:12 pm

மயிலுருவியில் இருந்த பார்வதி சிவபூஜை செய்யும் முறையை விளக்கி கூறுகிறார்.

திருக்குளத்தில் மூழ்கி குளித்துக் கரையேறி உடல் துடைத்து திருநீறு பூசிக் கொள்ள வேண்டும். நல்ல மலர்கள், நல்ல திருமஞ்சனநீர், இனிமையான பழங்களைப் பூசைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இறைவன் சந்நிதியைச் சுத்தம் செய்ய வேண்டும்.

துவார பூஜை, பரிவார பூஜை ஆக முறைப்படி செய்ய வேண்டும். பால், தயிர், நெய், தேன் முதலியவற்றால் தனித்தனியாக அபிஷேகம் செய்ய வேண்டும். இறைவனின் திருமேனியில் படிந்திருக்கும் ஈரத்தை திருவொத்தடை கொண்டு ஒற்றி எடுக்க வேண்டும்.

நறுமணமுள்ள செங்கழுநீர் மலர், தாமரை மலர், மருக்கொழுந்து குறுவேர், செண்பக மலர் மற்றும் பலவகை மலர் கொண்டு கட்டப் பெற்ற திருப்பள்ளித் தாமங்களைச் சாத்த வேண்டும்.

வெண்பட்டுத் துணி விரித்துச் சாத்தி, இரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள் அணிவித்து, வெல்லம், பசுவின் பால், நெய், முப்பழங்கள் என்னும் இவை சேர்த்து அமைக்கப்பட்டிருக்கிற அன்னம், தாம்புலம், தூய்மையான நீர் என்னும் இவைகளை நிவேதனம் செய்ய வேண்டும்.

பூஜையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று போற்றி, மலர் கொண்டு பூஜை செய்யவேண்டும் என்று பூஜை முறையை விளக்கமாக கூறுகிறார்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum