தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… காலையில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார்

Go down

குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… காலையில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார் Empty குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… காலையில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார்

Post  ishwarya Tue Apr 09, 2013 1:24 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனது
குடும்பத்தினருடன் பிறந்த நாளைக் கொண்டாடினார். நள்ளிரவில் கேக் வெட்டி
பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி, காலையில் தனிமையான இடத்துக்குச்
சென்றுவிட்டார்.
12-ம்தேதி காலையில் ரஜினி இல்லம் தேடி மலர்க்கொத்துகள், மலர் மாலைகளுடன்
வந்த ரசிகர்களை ரஜினியின் மனைவி லதா வரவேற்று இனிப்பு வழங்கினார்.



நிச்சயம் ரசிகர்களை இன்னொரு நாள் ரஜினி சந்திப்பார் என்று ரசிகர்களுக்கு பதில் கூறி அனுப்பினார்.

பொதுவாக தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடுவதில்லை ரஜினிகாந்த்.
யாரும் தொடர்பு கொள்ள முடியாத இடத்துக்குச் சென்றுவிடுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பிறந்த நாளின் போது சென்னையிலேயே
இருந்தார் ரஜினி. 11-ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு மனைவி லதா, மகள்கள்
ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் அவர் பிறந்த
நாளைக் கொண்டாடினார்.

இதுகுறித்து ட்விட்டரில், “அப்பாவுடன் இன்றைய நாளை இனிமையுடன்
கொண்டாடினோம். உலகிலேயே மிகச்சிறந்த தந்தையான எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா.

சௌந்தர்யா கூறுகையில், “இந்த இரவுதான் உலகிலேயே பெஸ்ட் என்பேன்.
அப்பாவின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினோம். மிகச் சிறந்த
தந்தையாகவும், சிறந்த மனிதாபிமானியாகவும் திகழும் சூப்பர் ஸ்டாருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் குவிப்பு

இன்று காலை 7 மணியிலிருந்தே ரஜினியின் இல்லம் அமைந்துள்ள போயஸ்
கார்டனில் ரசிகர்கள் திரண்டனர். வழக்கம்போல இந்த ஆண்டும் ரஜினி
பார்க்கமாட்டார் என்பது புரிந்திருந்ததால், கூட்டம் சற்று குறைவாகவே
இருந்தது. ஆனால் எக்கச்சக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மூன்றரை மணிநேரம் காத்திருந்த பிறகு, ரசிகர்கள் வரிசையாக
நிற்கவைக்கப்பட்டு, ஒவ்வொருவராக ரஜினி வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
வாழ்த்து அட்டைகள், பூங்கொத்துக்கள், மலர் மாலைகள், சிறப்பு பூஜை
பிரசாதங்கள் என ரசிகர்கள் பலவிதமாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, கடலூர், விழுப்புரம் என பல்வேறு
மாவட்டங்களிலிருந்து ரசிகர்கள் வந்திருந்தனர். சிலர் முந்தைய நாள் இரவே
சென்னைக்கு வந்து அறை எடுத்துத் தங்கி ரஜினியைப் பார்க்க வந்திருந்தனர்.

ஒவ்வொரு ரசிகரும் ரஜினியின் நலம் மற்றும் அவரைப் பார்க்க விரும்பும் தங்களின் ஆவலை லதாவிடம் தெரிவித்தனர்.

பதிலுக்கு அவர், “இன்று அவரைப் பார்க்க முடியாது. ஆனால் நிச்சயம்
விரைவில் உங்களைச் சந்திக்கப்பார்,” என்று கூறி இனிப்பு கொடுத்து அனுப்பி
வைத்தார். ரசிகர்களின் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு அவர் நன்றி
தெரிவித்துக் கொண்டார்.

கருணாநிதி வாழ்த்து

முன்னதாக பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிக்கு திமுக தலைவர் கருணாநிதி,
மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துத்
தெரிவித்தனர்.

திரையுலகப் பிரமுகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்கத் தெரிவித்த
வண்ணமிருந்தனர். ரஜினியின் குரு பாலச்சந்தர், காலையிலேயே ரஜினியை
வாழ்த்தினார். பஞ்சு அருணாசலம், கவிஞர் வாலி, ஏவிஎம் சரவணன், எஸ்பி
முத்துராமன், கலைப்புலி தாணு உள்பட ஏராளமானோர் வாழ்த்தினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum