தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூச்ச சுபாவத்தை மறந்துட்டேன்! வித்யா பாலன் ஓபன் டாக்!!

Go down

கூச்ச சுபாவத்தை மறந்துட்டேன்! வித்யா பாலன் ஓபன் டாக்!! Empty கூச்ச சுபாவத்தை மறந்துட்டேன்! வித்யா பாலன் ஓபன் டாக்!!

Post  ishwarya Tue Apr 09, 2013 12:09 pm

சில்க் வேடத்தில் நடித்ததால் என் கூச்ச சுபாவத்தையே மறந்து விட்டேன்,
என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை
வரலாற்றைத் தழுவிய தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில், சில்க் வேடத்தில்
நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் நடிகை வித்யா பாலன். அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து வித்யா பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
அதில், டைரக்டர் மிலன் லூதிரா, சில்க் சுமிதாவாக நடிக்க என்னை ஏன்
தேர்ந்தெடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தென்னிந்திய பெண்
என்பதால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அவரிடமே, `என்னை ஏன்
தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்டேன். `காரணம் படம் வெளிவந்த பிறகு
தெரியும். உன்னைத் தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க
முடியாது என்றார். இவை அனைத்தையும் விட இந்தியாவிற்கும், உலகத்துக்கும் என்
உடல் கவர்ச்சியை காட்டும் ஓர் வாய்ப்பை இந்த சினிமா எனக்கு அளித்துள்ளது,
என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு நான் என்னுடைய கூச்ச சுபாவத்தையே
மறந்து விட்டேன். சில்க் போன்ற உடல் அழகும், போதுமான எடையும் என்னிடம்
இருப்பதாக உணர்கிறேன். மேலும் ரசிகர்கள் விரும்பும் அளவு பெண்மைக்கு
தேவையான நெளிவு சுழிவுகள் என் உடலில் இருக்கிறது, என்று கூறியிருக்கிறார்.

டர்ட்டி பிக்சர் படத்தை உங்கள் தந்தையுடன் அமர்ந்து கூச்சமின்றி
பார்ப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் வித்யா, கண்டிப்பாக
பார்ப்பேன். ஏனென்றால் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்
அவ்வளவுதான். நடிப்பிற்குரிய மரியாதையை நான் கொடுத்துள்ளேன். எந்த ஒரு
செயலை செய்தாலும் அதில் உறுதியாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று
என் பெற்றோர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். எனினும் ஒரு சில காட்சிகள்
அவர்களுக்கு கூச்சமாக இருக்கலாம். ஆயினும் அவர்கள் மகள் ஒரு நடிகை என்பதால்
பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியதிருக்கும் என்ற தொலைநோக்கு
பார்வையில் எடுத்துக் கொள்வார்கள், என்று கூறியிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum