தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காளஹஸ்தி கோயிலில் பிரபுதேவா பரிகார பூஜை!

Go down

காளஹஸ்தி கோயிலில் பிரபுதேவா பரிகார பூஜை! Empty காளஹஸ்தி கோயிலில் பிரபுதேவா பரிகார பூஜை!

Post  ishwarya Mon Apr 08, 2013 1:20 pm

காளஹஸ்தி கோயிலில் பிரபுதேவா ராகு-கேது பரிகார பூஜைகள் செய்து
வழிபட்டார். யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்களது
காதலில் உறுதியாய் இருந்தனர் பிரபுதேவா-நயன்தாரா ஜோடி. கல்யாணம்
பண்ணாமலேயே சிறந்த தம்பதிகள் பட்டம் எல்லாம் வாங்கி, இந்த உலகத்தையே வலம்
இந்த காதல் பறவைகள் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நயன்தாரா
மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். பிரபுதேவாவோ, தன்னுடைய இந்தி
படங்களில் பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் பிரபுதேவா நேற்று ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள
சிவன் கோயிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு கோயில் சார்பில் வரவேற்பு
அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரபுதேவா, ராகு-கேது பரிகார பூஜையில் கலந்து
கொண்டு சுமார் 1 மணி நேரம் பூஜை செய்தார். பின்னர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்
மற்றும் ஞானபூங்கோதை அம்மையாரை தரிசனம் செய்தார்.

பரிகார பூஜைகள் எல்லாம் முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த
பிரபுதேவா, தற்போது இந்தியில் ரவுடி ரத்தோர் படத்தை இயக்கி வருகிறேன்.
இப்படம் ஜூன் மாதம் ரிலீசாக இருக்கிறது. அதற்கான வேலைகளில் மும்முரமாக
இருக்கிறேன் என்றார். நயன்தாரா உடனான பிரிவு குறித்து கேட்டபோது, சாரி நோ
கமெண்ட்ஸ். நான் கோயிலுக்கு வந்துள்ளேன். இப்போது அதைப்பற்றி பேச
விரும்பவில்லை என்று கூறிவிட்டு வேகமாக காரில் புறப்பட்டு சென்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum