தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாராவுடன் ஆழமான நட்பு வைத்திருக்கிறேன் ஆர்யா பேட்டி

Go down

நயன்தாராவுடன் ஆழமான நட்பு வைத்திருக்கிறேன் ஆர்யா பேட்டி  Empty நயன்தாராவுடன் ஆழமான நட்பு வைத்திருக்கிறேன் ஆர்யா பேட்டி

Post  amma Fri Apr 05, 2013 5:35 pm



‘‘நயன்தாராவுக்கு எங்கள் வீட்டில் பிரியாணி விருந்து கொடுத்தது உண்மைதான். அவருடன் நான் ஆழமான நட்பு வைத்திருக்கிறேன்’’ என்று நடிகர் ஆர்யா கூறினார்.

பேட்டி

கண்ணன் டைரக்ஷனில், யு.டி.வி. நிறுவனம் தயாரித்துள்ள ‘சேட்டை’ படத்தில் ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்துள்ளனர். மூன்று பேரும் ‘சேட்டை’ படத்தை பற்றி கூட்டாக பேட்டி அளித்தார்கள்.

அப்போது, ஆர்யாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஆர்யா அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் உங்கள் வீட்டில் அடிக்கடி பிரியாணி விருந்து கொடுப்பதாக பரவலாக பேசப்படுகிறதே?

பதில்:– எனக்கு பிரியாணி பண்ண தெரியாது. எங்க அம்மாதான் பிரியாணி சமைக்கிறார்கள். அம்மா சமையலை நண்பர்களும் சாப்பிடட்டுமே என்று ஒரே ஒரு நாள் பிரியாணி விருந்து கொடுத்தேன். அவ்வளவுதான்.

நயன்தாரா

கேள்வி:– உங்களுக்கும், நயன்தாராவுக்கும் இடையே இருப்பது நட்பா, ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற உறவா?

பதில்:– நயன்தாராவுக்கும், எனக்கும் இடையே இருப்பது நட்புதான். நயன்தாராவுடன் நான் ஆழமான நட்பு வைத்திருக்கிறேன்.

முத்தம்

கேள்வி:– இந்த படத்தில் உதட்டுடன் உதடு சேர்த்து முத்த காட்சி இருப்பதாகவும், ஹன்சிகா, அஞ்சலி ஆகிய இருவருக்குமே நீங்கள் முத்தம் கொடுத்து நடித்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறதே?

பதில்:– முத்தக்காட்சி இருப்பது உண்மைதான். ஆனால், அஞ்சலிக்கு மட்டுமே முத்தம் கொடுத்து நடித்தேன். ஹன்சிகா வேண்டும் என்று கேட்டிருந்தால், கொடுத்து இருப்பேன்.

பிடித்தது

கேள்வி:– ஹன்சிகா புஷ்டியாக இருப்பது உங்களுக்கு பிடித்து இருக்கிறதா?

பதில்:– புஷ்டியான ஹன்சிகாவை பிடிக்கும்தான். ஆனால், இந்த படத்தில் அவர் டெங்கு காய்ச்சல் வந்தவர் போல் மெலிந்து விட்டார்.’’இவ்வாறு ஆர்யா கூறினார்.

அனுபவம்

கேள்வி(அஞ்சலியிடம்):– ஆர்யாவுடன் முத்தக்காட்சியில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

அஞ்சலி பதில்:– ‘டீசன்ட்’ ஆக இருந்தது.

கேள்வி:– உங்களுக்கும் ஆர்யா பிரியாணி விருந்து கொடுத்தாரா?

பதில்:– எனக்கு இன்னும் கொடுக்கவில்லை.

கேள்வி(டைரக்டர் கண்ணனிடம்):– இந்த படத்துக்கு, ஆர்யாவை மனதில் வைத்துதான் ‘சேட்டை’ என்று பெயர் சூட்டினீர்களா?

டைரக்டர் கண்ணன் பதில்:– ஆமாம். ஆர்யா ஒரு ஜாலியான மனிதர் என்பதால், இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம்.’’ மேற்கண்டவாறு டைரக்டர் கண்ணன் பதில் அளித்தார்.

பேட்டியின்போது பட அதிபர் தனஞ்செயன், நடிகர் நாசர், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் உடன் இருந்தார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» நயன்தாராவுடன் ஆர்யா நெருக்கம்?: மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேருகிறார்கள்
» நயன்தாராவுடன் மிக நெருக்கமாக இருப்பது உண்மைதான்! - மனம் திறக்கும் ஆர்யா.
» சினிமாவில் தம்பிக்கு உதவ மாட்டேன் : ஆர்யா பேட்டி
» நயன்தாரா, அனுஷ்காவுடன் இணைத்து வதந்திகள்: ஆர்யா பேட்டி
» ‘காதலி’ நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum