தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷ் படத்தை இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை!

Go down

தனுஷ் படத்தை இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை! Empty தனுஷ் படத்தை இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை!

Post  ishwarya Fri Apr 05, 2013 11:51 am

தனுஷ் படத்தை இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை! 3-Movie-Photosநடிகர்
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் “3 படத்தை, இணையதளங்களில் வெளியிட, சென்னை
ஐகோர்ட் தடை விதித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ்
நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: நடிகர் தனுஷ், நடிகை ஸ்ருதி
ஹாசன் நடிக்கும் “3 படத்தை, நாங்கள் தயாரித்துள்ளோம். இதை ஐஸ்வர்யா
இயக்கியுள்ளார். 22 கோடி ரூபாய் பட்ஜெட்டில், தமிழ், தெலுங்கு, இந்தி
மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன், படத்தின்
முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இப்படத்தில் “ஒய் திஸ் கொல வெறி எனும் பாடல்,
உலக அளவில் பிரபலமாகியுள்ளது. “3 படம் இன்று வெளியிடப்படுகிறது. படத்தின்
பதிப்புரிமை எங்களுக்கு உள்ளது. ஒரு படம் வெளியான உடனேயே, வீடியோ திருட்டு
நடக்கிறது. படத்தை சட்டவிரோதமாகப் பதிவு செய்து, இணைய தளங்களில்
வெளியிடுகின்றனர். இதனால், சினிமா வர்த்தகத்தில் மிகுந்த பாதிப்பு
ஏற்படுகிறது.

எங்கள் “3 படத்தை, இணையதளம் போன்ற பல்வேறு வழிகளில், வேறு நிறுவனங்கள்,
நபர்கள் வெளியிடுவது, எங்களுக்கு உரிய பதிப்புரிமை சட்டத்தை மீறுவதாகும்.
படத்தை “சிடி, “டி.வி.டி., “வி.சி.டி.,க்களில் இணைய தளம் மூலம் பதிவேற்றம்
செய்தால், எங்களுக்கு இழப்பு ஏற்படும். அரசுக்கும் பொழுதுபோக்கு சாதனம்
மூலம் கிடைக்கும் வருவாயில் பாதிப்பு ஏற்படும். இந்தப் படத்தை பதிவுசெய்து,
“சிடி, எம்.எம்.எஸ்., பென்டிரைவ், உள்ளிட்ட பல வழிகளில் மொபைல் சேவை
நிறுவனங்கள் வெளியிடுவர் என கருதுகிறோம். எனவே, “3 படத்தை, இணையதளங்களில்
பதிவேற்றம், பதிவிறக்கம் செய்து, பல்வேறு வழிகள் மூலம் வெளியிட, மொபைல்
போன் சேவை நிறுவனங்களுக்கும், தனி நபருக்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி வாசுகி,
“மனுதாரர் கோரியபடி இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு
அனைவருக்கும் தெரிவதற்காக, தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிட
மனுதாரருக்கு அனுமதியளிக்கப்படுகிறது. மனுவுக்குப் பதிலளிக்க மொபைல் போன்
சேவை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.
விசாரணையை ஏப்ரல் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum