தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூட்டணி அரசை நடத்துவது எளிதான காரியம் அல்ல பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு

Go down

கூட்டணி அரசை நடத்துவது எளிதான காரியம் அல்ல பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு  Empty கூட்டணி அரசை நடத்துவது எளிதான காரியம் அல்ல பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு

Post  amma Thu Apr 04, 2013 5:38 pm



கூட்டணி அரசை நடத்திச்செல்வது எளிதான காரியம் அல்ல என்று கூறிய பிரதமர் மன்மோகன்சிங், பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைக்கும்படி, வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது–

உறுதியான நடவடிக்கை

‘‘உலக பொருளாதார மந்த நிலை காரணமாக,கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும் தற்காலிகமான ஒன்றுதான். அரசின் உறுதியான வேகமான நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாக அதிகரிக்க முடியும்.

அதற்காக உலக அளவில் பொருளாதார மந்த நிலை சீரடையும் வரை நாம் காத்து இருக்க வேண்டும். ஆனால், நாம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு உள்நாட்டு கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்ளது. அதிகரித்துவரும் நிதிப்பற்றாக்குறையை சரிசெய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கூட்டணி அரசு எளிதல்ல

கூட்டணி அரசை நடத்திச்செல்வது என்பது எளிதல்ல. நமது ஆட்சி நிர்வாகத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஊழல் முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அதிகாரிகளின் செயலற்ற திறன் மற்றொரு பிரச்சினையாகும்.

ஆனால், இவையெல்லாம் இப்போதுதான் உடனடியாக உருவானவை அல்ல. 2016–17–ம் ஆண்டுக்குள் உள்நாட்டு மொத்த உற்பத்தி நிதிப்பற்றாக்குறையை 3 சதவீதமாக குறைப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க அனைத்து உறுதியான நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இந்திய தொழில் துறையினர் நமது இந்த உறுதிப்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

டீசல் விலை

பணவீக்க நிர்ப்பந்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் அவசியமாகும். எரிபொருட்களுக்கான மானியங்களை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த சில மாதங்களில் டீசல் விலை நிர்ணயம் சந்தை விலையின் அடிப்படையில் அமையும்.

ஆதார் அடையாள அட்டைகள் மூலம் மக்களுக்கு நேரடியாக அரசின் மானியங்கள் சென்று அடைவதன் மூலம் பல்வேறு குறைபாடுகளை தடுக்க முடியும். இதுபோன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட இருக்கின்றன. அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையையும் மத்திய அரசு மறு ஆய்வு செய்து வருகிறது’’. இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» சரப்ஜித் சிங் மரணம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்
» பொலிவான முகத்துக்கு எளிதான குறிப்புகள்
»  காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான அரசை நடத்த முடியும்: ராகுல் காந்தி
» எந்த நாட்டிடம் உதவியை பெற்றாலும் எனது அரசை கவிழ்க்க முடியாது என்கிறார் மஹிந்தர்.
» இலங்கை அரசை கண்டித்து நடிகர் நடிகைகள் உண்ணாவிரதம்: ரஜினி-கமல் கலந்து கொள்கிறார்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum