தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூட்டிங் நடக்கும்! நடக்காது!! தயாரிப்பாளர்கள்-பெப்சி மோதல் வலுக்கிறது!!

Go down

சூட்டிங் நடக்கும்! நடக்காது!! தயாரிப்பாளர்கள்-பெப்சி மோதல் வலுக்கிறது!! Empty சூட்டிங் நடக்கும்! நடக்காது!! தயாரிப்பாளர்கள்-பெப்சி மோதல் வலுக்கிறது!!

Post  ishwarya Thu Apr 04, 2013 5:24 pm

சினிமா தொழிலாளர் சம்பள பிரச்னையில் இன்னும் ஒரு சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் இன்று(07.04.12) முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர் பெப்சி அமைப்பினர். மற்றொருபுறம் புதிய தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் இருவர் இடையேயான மோதல் வலுக்கிறது.

சினிமா தொழிலாளர்கள் சம்பள உயர்வு தொடர்பாக பெப்சிக்கும்-தயாரிப்பாளர்களுக்கும் இடையே பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் இன்னும் ஒரு சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. 15 சங்கங்களுக்கான சம்பள உயர்வு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், பட அதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. கடைசியாக கடந்த 3ம் தேதி நடந்த தொழிலாளர் நல ஆணையத்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை தயாரிப்பாளர்கள் புறக்கணித்து விட்டனர். பேச்சுவார்த்தையை தயாரிப்பாளர்கள் புறக்கணித்ததால் ஏப்ரல் 7ம்(இன்று) முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என்று பெப்சி அறிவித்து இருந்தது.

இதனிடையே பெப்சி தொழிலாளர்களின் ஸ்டிரைக் தங்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், புதிய சங்க தொழிலாளர்கள் மூலம் படப்பிடிப்‌பை தொடர்ந்து நடத்துவோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். மேலும் எங்களுடன் இணைந்து பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு நடத்துவோம் என்று கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் அறிவித்தப்படி பெப்சி தொழிலாளர்கள் இன்று 7ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ் சினிமாவின் பெரும்பாலான படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடுகளில் நடந்து வரும் சூட்டிங்கையும் பெப்சி தொழிலாளர்கள் புறக்கணித்துள்ளனர். இதனால் தமிழ் சினிமாவே முடங்கி போய் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சொன்னது போன்ற சில படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. நடிகரும், தயாரிப்பாளருமான கருணாஸ் தனது சொந்த தயாரிப்பான கென் ஸ்டுடியோ மூலம் ரகளைபுரம் என்ற புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று (சனிக்கிழமை) ரெட்ஹில்ஸ் அருகே நடத்த திட்டமிட்டு இருக்கிறார். வேலை நிறுத்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு தேவைப்படும் தொழிலாளர்களை வைத்து, படப்பிடிப்பை நடத்திக் காட்டுவேன் என்று கூறியுள்ளார். இதேபோல் கார்த்தி நடித்து வரும் அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட் சில படப்பிடிப்புகளும், புதிய தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்‌பை நடத்தி வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சூட்டிங் நடக்கும்! நடக்காது!! தயாரிப்பாளர்கள்-பெப்சி மோதல் வலுக்கிறது!!
» பாரதிராஜா- இளையராஜா மோதல் வலுக்கிறது
» விஜய் பட சூட்டிங் மட்டும் எப்படி நடக்கிறது? எதிர் தயாரிப்பாளர்கள் கேள்வி!
» வர்ஷாவுடன் தயாரிப்பாளர்கள் மோதல்!
» மன்னிப்புக் கேள்… இல்லையேல் மலையாளத்துக்கு ஓடு!! – ஆர்யாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum