தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘மங்காத்தா’ பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம்

Go down

‘மங்காத்தா’ பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம் Empty ‘மங்காத்தா’ பட நடிகர் மகத் மீது தாக்குதல்: நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜை கைது செய்ய தீவிரம்

Post  ishwarya Tue Apr 02, 2013 5:53 pm

நடிகர் அஜீத்குமார் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் நடித்தவர் இளம் நடிகர் மகத். பெசன்ட்நகர் கலாசேத்ரா காலனியில் வசித்து வரும் இவர் கடந்த 7-ந்தேதி அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ‘பிலிம்பேர்’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவர் இரவு 11 மணிக்கு மேல் மது விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர் மஹத், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனும், நடிகருமான மனோஜ் மற்றும் ஏராளமான நடிகர் – நடிகைகள் பங்கேற்றனர்.

நள்ளிரவு 2 மணி அளவில் மனோஜ் நடிகர் மகத்தை தனியாக அழைத்துச் சென்றார். அவருடன் அவரது நண்பர்கள் 3 பேரும் போதையில் இருந்தனர். 4 பேரும் சேர்ந்து திடீரென மகத்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் மது விருந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் மனோஜை சத்தம் போட்டு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மகத், ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதில் நடிகர் மோகன்பாபு ஆந்திராவில் மிகப்பெரிய நடிகர். அவரது மகன் மனோஜால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என்னை தாக்கிய அவர் மீதும் அவரது நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

துணை கமிஷனர் புகழேந்தி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

341 ஐபிசி (தடுத்து நிறுத்துதல்), 294-பி-ஐ.பி.சி (அசிங்கமாக பேசுதல்), 323 ஐ.பி.சி. (கையால் தாக்குதல்), 506(1) (ஆயுதங்கள் இன்றி கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக மனோஜை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சென்னை விமான நிலையம் அருகில் அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு விரைந்து சென்று தேடினர். அதற்குள் மனோஜ் அங்கிருந்து நண்பர்களுடன் ஆந்திராவுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் இன்று ஆந்திராவுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

ஆடுகளம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த நடிகை டாப்ஸியை மகத்தும், மனோஜும் காதலிப்பதாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட போட்டியே மோதலில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, மோதலுக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்
» மகன் படத்தில் பிராமனர்களை இழிவுபடுத்தும் காட்சி: நடிகர் மோகன்பாபு வீடு மீது திடீர் தாக்குதல்
» நடிகர் மகத் மீது டாப்ஸி மீண்டும் பாய்ச்சல்: என்னை காதலிப்பதாக வதந்தி பரப்புவதா?
» பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: 150 பேர் கைது
» படகுகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்குதல்: இந்தி நடிகர் சல்மான்கான் மீது மீனவர் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum