தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருபுட்குழி தலம்

Go down

திருபுட்குழி தலம் Empty திருபுட்குழி தலம்

Post  meenu Mon Apr 01, 2013 5:38 pm


மாகாளயபட்ச திதியில் வணங்க நலம் பல அருளும் சிறப்பான திவ்ய தேசம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள திருபுட்குழி தலமாகும். தாயார் வறுத்தபயிறை மூளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார்.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும்.

விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.ராமானுஜரின் குருவான யாதவ பரகாசர் இங்கு தான் வசித்தார். இத்தலத்தின் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது.

சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இது மாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை. என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள். திருவிழாவின் 8-ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார்.

ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.மகாளய அமாவாசை-புரட்டாசி மாதத்தில் நிகழும் புண்ணிய தினம் மிக விசேஷம். திரு என்றால் மரியாதை புள் என்றால் ஜடாயு.

குழி என்றால் ஈமக் கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது. ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது.

சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருளவேண்டும் எனவும் வேண்டியபடி உயிர் விட்டது.

அதன் படி ஜடாயுவை தன் வலது பக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள் பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது.

எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடதுபுறமும், ஆண்டாள்சன்னதி பெருமாளுக்கு வலது புறமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே அங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது.

மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள் பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடி மரமும், பலி பீடமும் கோவிலுக்கு வெளியில் உள்ளது.

போக்குவரத்து வசதி....

காஞ்சிபுரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum