பள்ளிப்புரம் மகாலட்சுமி கோவில்
Page 1 of 1
பள்ளிப்புரம் மகாலட்சுமி கோவில்
காஞ்சிபுரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் மகாலட்சுமிக்கு கோவில் கட்டி வணங்கினர். பிழைப்புக்காக கேரளா சென்றவர்கள் பள்ளிப்புரத்தில் (சேர்த்தலை அருகில்) ஒரு கோவில் கட்டி அங்கே வழிபாடுகள் நடத்துகின்றனர். காஞ்சியிலிந்து முதலை மூலமாக இத்தலம் வந்ததாக கூறி முதலையை வாகனமாக வைத்துள்ளனர்.
9 கிரகங்களுக்கும் அதிதேவதைகள் இங்கே அருற்தருகின்றனர். அருகில் உள்ள ஏரிநீர் உப்பாக உள்ளது. உப்பில் மகாலட்சுமி உள்ளதாகக் கூறும் பக்தர்களுக்கு அதே ஏரியின் அடுத்த பகுதியில் அருந்த சுவையான குடிநீரை குணம்மாற்றி தன் சக்தியால் தந்திருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த அம்மன் கடலில் ஸ்ரீ மகாலட்சுமி என்று அழைக்கப்படுகின்றாள். வழிபடுபவர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் குபேர சம்பத்தும் பெற்றுத்தருகிறாள் என்பது பக்தர்கள் தகவல். நெற்கதிர் கிளி, சங்கு சக்கரமேந்தி காட்சி தரும் நாற்கரத்து வேத நாயகி சன்னதியில் கணபதி, ஐய்யப்பன், கொடுங்காளி, சேத்திர பாலகர்கள் உள்ளனர்.
இங்குள்ள ஏரியில் இருந்த முதலைக்கு பக்தர்கள் உணவிட்டு வந்தனர். பிறகு அதற்கொரு சிலை வடித்து கருவறைக்கு அருகில் வைத்து விட்டனர். கேரளா ஆலப்புழையிலிருந்து 30 கி.மீ.யில் சேர்த்தலை. அங்கிருந்து வடகிழக்கே 7 கி.மீ.யில் உள்ளது பள்ளிப்புரம் மகாலட்சுமி கோவில்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோலாப்பூர் மகாலட்சுமி கோவில்
» பள்ளிப்புரம் மகாலட்சுமி கோவில்
» மகாலட்சுமி அஷ்டகம்
» கோலாப்பூர் மகாலட்சுமி கோவில்
» கோலாப்பூர் மகாலட்சுமி கோவில்
» பள்ளிப்புரம் மகாலட்சுமி கோவில்
» மகாலட்சுமி அஷ்டகம்
» கோலாப்பூர் மகாலட்சுமி கோவில்
» கோலாப்பூர் மகாலட்சுமி கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum