தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனைவி சித்ரவதை புகாரில் கைதான நடிகர் தர்ஷனுடன் மீண்டும் நடிப்பேன்: நிகிதா

Go down

மனைவி சித்ரவதை புகாரில் கைதான நடிகர் தர்ஷனுடன் மீண்டும் நடிப்பேன்: நிகிதா Empty மனைவி சித்ரவதை புகாரில் கைதான நடிகர் தர்ஷனுடன் மீண்டும் நடிப்பேன்: நிகிதா

Post  ishwarya Mon Apr 01, 2013 1:19 pm

நடிகை நிகிதா தமிழில் ‘சரோஜா’, ‘முரண்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். நிகிதாவுக்கும், கன்னட நடிகர் தர்ஷனுக்கும் காதல் என கிசுகிசுக்கள் வந்தன. நிகிதாவுடன் நெருக்கமாக இருப்பதால் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தர்ஷன் கைதானார். நிகிதா நடிப்பதற்கு கன்னட திரையுலகம் தடையும் விதித்தது.

ஜெயிலில் இருந்து விடுதலையான தர்ஷன் ‘சாரதீ’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் தர்ஷனுடன் மீண்டும் நடிக்க உள்ளதாக நிகிதா கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தர்ஷனும், நானும் 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். அவர்மேல் எனக்கு மரியாதை உள்ளது. கன்னட படங்களில் நடிக்காமல் சில காலம் விலகி இருந்தேன். தர்ஷனுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அவருடன் நடிக்க மாட்டேன் என்பதற்கு எந்த காரணமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum