தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ தேவி கன்னிகாபரமேஷ்வரி அம்மன் ஆலயம்

Go down

ஸ்ரீ தேவி கன்னிகாபரமேஷ்வரி அம்மன் ஆலயம் Empty ஸ்ரீ தேவி கன்னிகாபரமேஷ்வரி அம்மன் ஆலயம்

Post  meenu Mon Apr 01, 2013 1:19 pm

ஆவடி, கன்னிகாபுரம் பகுதியில் ஸ்ரீ தேவி கன்னிகாபரமேஷ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது முந்தைய காலத்தில் இந்த இடத்தில் கன்னிகாபரமேஷ்வரி என்ற ஆலயத்தை அமைக்க 1 ஏக்கர் 8 செண்ட் நிலத்தை கோவில் கட்டுவதற்காக இந்த இடத்தை ஒதுக்கினார்கள்.

கோவில் அமைப்பதற்காக ஒதுக்கபட்ட இந்த இடத்தில் ஒரே ஒரு கல் இருந்ததாகவும், அதனையே இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கன்னிகாபரமேஷ்வரி தெய்வமாக உருவம் தந்து பூஜிக்க தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீ தேவி கன்னிகாபரமேஷ்வரி அம்மன் அலயம் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த பகுதியில் ஸ்ரீ தேவி கன்னிகாபரமேஷ்வரி அம்மன் ஆலயம் அமைந்திருப்பதாலையே, இந்த பகுதிக்கு கன்னிகாபுரம் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு பின்னால் வந்த சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள், 1271974 ஆண்டு முதல் இந்த ஆலயத்தை திருமணம் ஆகாத நிலையில் உள்ள பிரம்மாயி, மகேஷ்வரி, சௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, வராகி என்று 7 கன்னியர்களை சப்த கன்னிகள் என்று அழைத்து முறையான வழிபாட்டை வழிபட தொடங்கினார்கள்.

இந்த ஆலயத்திலுள்ள சப்த கன்னியர்களை நம்பிக்கையோடு தரிசித்து வேண்டினால் குறைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் திருமணம் ஆகாத பெண்கள் இந்த ஆலயத்திற்கு வந்து நம்பிக்கையோடு வேண்டினால் திருமணம் கைகூடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகவும் ஐதீகமாக உள்ளது.

மேலும் இந்த ஆலய வளாகத்தில் வினாயகர், முனிஸ்வரன், அண்ணமார் என்ற தேய்வங்களும் உள்ளது. இதில் அண்ணமார் என்று அழைக்கபடும் தெய்வமானது, ஆலயத்தில் உள்ள சப்த கன்னியர்களின் அண்ணனாக இருப்பவர், இதனாலையே இவரை அண்ணமார் என்றும் அழைக்கபடுவதாகவும் கூறப்படுகிறது.

ஆவடி பகுதிக்கு, எல்லை தேய்வாமாக திகழும் செல்லியம்மன் ஆலயத்திலிருந்து ஆண்டு தோறும் கரகம் எடுத்து வரப்பட்டு, இந்த சப்த கன்னிகள் கோவிலில் கரகத்தை வைத்து ஆடி மாதம் 5வது வாரத்தில் இந்த சப்த கன்னிகளுக்கு விஷேச பூஜைகள், அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பெரிய நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இது தவிர நாள் தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum