தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைரவன் சுவாமி கோயில்

Go down

வைரவன் சுவாமி கோயில் Empty வைரவன் சுவாமி கோயில்

Post  birundha Fri Mar 29, 2013 10:43 pm

ஸ்தல வரலாறு...

மூலவர் - வளரொளிநாதர் (வைரவன்)
அம்மன் - வடிவுடையம்பாள்
தல விருட்சம் - ஏர், அளிஞ்சி
தீர்த்தம் - வைரவர் தீர்த்தம்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் - வடுகநாதபுரம்

இங்கு கருவறை கோஷ்டத்தில் இராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இலங்கைக்கு சென்று சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம் நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருகை கூப்பி வணங்கியபடி இராமர் காட்சி தருகிறார். இவரை வணங்கிட அகம்பாவம் ஒழிந்து, பணிவு குணம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

அம்பாள் சன்னதிக்கு முன் பைரவர் தனிச்சன்னதியில் வலப்புறம் திரும்பிய நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வெளியே உள்ளது. இதில் நீராடி, சுவாமியை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பாவம் தீரும், நோய், எதிரி பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

அம்பாள் கருவறைக்கு பின்புறம் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை வணங்கினால் தோஷங்கள் தீரும். இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாகக் கட்டப்பட்டுள்ளது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum