தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கோர்ட்டில் இன்று விஜயகாந்த் ஆஜராகவில்லை

Go down

முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கோர்ட்டில் இன்று விஜயகாந்த் ஆஜராகவில்லை Empty முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கோர்ட்டில் இன்று விஜயகாந்த் ஆஜராகவில்லை

Post  meenu Thu Mar 28, 2013 2:09 pm

கர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கடந்த 14.10.2012-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது விஜயகாந்த், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி குமரி மாவட்ட அரசு வக்கீல் ஞானசேகர் நாகர்கோவில் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மாவட்ட செசன்சு நீதிபதி குமரகுரு, மார்ச் 27-ந்தேதி அதாவது இன்று விஜயகாந்த் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் விஜயகாந்த் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீல்கள் பொன்.செல்வராஜன், தினேஷ் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் நீதிபதி குமரகுருவிடம் 3 மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதில் சட்டசபை நடந்து கொண்டு இருப்பதால் விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜராக 2 மாத அவகாசம் வேண்டும், விஜயகாந்த்துக்கு பதில் வக்கீல்கள் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

அப்போது அரசு வக்கீல் ஞானசேகர் குறுக்கிட்டு விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பிய பிறகும் இன்று அவர் ஆஜராகவில்லை. அவர் கோர்ட்டை அவமதித்து விட்டார். எனவே அவருக்கு வாரண்டு பிறப்பிக்க வேண்டும் என வாதாடினார்.

இதையடுத்து நீதிபதி குமரகுரு, விஜயகாந்த் சார்பில் வக்கீல்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறும் என ஒத்திவைத்தார். விஜயகாந்த் வழக்கு விசாரணையையொட்டி மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் ஆதிலிங்க பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயபிரபாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெகநாதன் உள்பட ஏராளமான தே.மு.தி.க.வினர் இன்று நாகர்கோவில் கோர்ட்டில் திரண்டு நின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கோர்ட்டில் இன்று விஜயகாந்த் ஆஜராகவில்லை
» முதல்-அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: கோர்ட்டில் இன்று விஜயகாந்த் ஆஜராகவில்லை
» கார் மோதி ஒருவர் பலியான வழக்கு: நடிகர் சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராகவில்லை
» விஜயகாந்த் குறித்து அவதூறாகப் பேசிய வடிவேலு மீது தேர்தல் ஆணையம் வழக்கு
» இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜனாதிபதி - முதல்-அமைச்சரை அழைக்க முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum