தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்ஸ்பெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய பெண் எஸ்.ஐ. மீது சஸ்பெண்டு நடவடிக்கை?

Go down

இன்ஸ்பெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய பெண் எஸ்.ஐ. மீது சஸ்பெண்டு நடவடிக்கை? Empty இன்ஸ்பெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய பெண் எஸ்.ஐ. மீது சஸ்பெண்டு நடவடிக்கை?

Post  meenu Thu Mar 28, 2013 1:45 pm

சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்த ஜெயபிரபா (30). கடந்த வாரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவருடன் குடும்பம் நடத்தி வந்த இன்ஸ்பெக்டர் ராஜதுரை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரின் செல்போனுக்கு சேலம் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. கோமளவள்ளி என்பவர் மெசேஜ் ஒன்றயை அனுப்பினார்.

அதில் எஸ்.ஐ. ஜெயபிரபா வயிற்றில் 3 மாத கரு இருந்ததாக பிரேத பரிசோதனை செய்த டாக்டர் கூறியுள்ளார். அது உங்களுடையது தானா? இதுதான் எஸ்.ஐ. ஜெயபிரபாவுக்கும், இன்ஸ்பெக்டர் ராஜதுரைக்கும் மோதல் வர காரணமாம். கிரேட் எஸ்கேப் என இருந்தது.

இதைபடித்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் அதிர்ச்சி அடைந்து காவலர் பயிற்சி பள்ளியின் துணை முதல்வர் பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக எஸ்.ஐ. கோமள வள்ளியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது இன்ஸ்பெக்டருக்கு மெசேஜ் அனுப்பியதை அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டருடன் பணியாற்றிய போது எனக்கு மெமோ கொடுத்து டார்ச்சர் கொடுத்தார். எனவே அவரை பழிவாங்க வேண்டும், குடும்பத்தோடு நிம்மதியாக இருக்க கூடாது என்பதற்காகவே தான் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசிடம் ஒப்படைக்கப்பட்டவுடன் எஸ்.ஐ. கோமள வள்ளி மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum