ஹோலி கொண்டாட்டத்தில் கோஷ்டி மோதல்: ஒருவர் பலி
Page 1 of 1
ஹோலி கொண்டாட்டத்தில் கோஷ்டி மோதல்: ஒருவர் பலி
மேற்குவங்க மாநிலத்தில் ஹோலி பண்டிகை தொடர்பாக இன்று நடைபெற்ற கோஷ்டி மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். நாடியா மாவட்டம், கல்யாணி நகர் அருகே உள்ள கடாஜங் பூபென் லோத் என்ற இடத்தில் உள்ள மக்கள் இன்று மதியம் ஒருவருக்கொருவர் வண்ணச் சாயங்களைப் பூசிக்கொண்டிருந்தனர். அப்போது வேறு பகுதியில் இருந்து வந்த நபர்கள், திடீரென கூட்டத்தில் புகுந்து அனுமதியில்லாமல் எல்லோருக்கும் சாயம் பூசியதாகத் தெரிகிறது. இதை உள்ளூர் மக்கள் கண்டித்ததைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சுபால் தாஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» திருவண்ணாமலையில் தனுஷ் ரசிகர்கள் கோஷ்டி மோதல் – 3 பேருக்கு மண்டை உடைந்தது
» தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் ‘குத்து’ ரம்யா திடீர் விலகல்
» அது கருணா கோஷ்டி நடத்தும் விழா அல்ல! – நடிகை சங்கீதா, கிரீஷ் விளக்கம்
» ஒருவர் வாய்ப்பை ஒருவர் தட்டிப் பறிக்கும் நயன்தாரா – த்ரிஷா!
» பக்த கோடிகளுக்கான கோஷ்டி கானங்கள்
» தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் ‘குத்து’ ரம்யா திடீர் விலகல்
» அது கருணா கோஷ்டி நடத்தும் விழா அல்ல! – நடிகை சங்கீதா, கிரீஷ் விளக்கம்
» ஒருவர் வாய்ப்பை ஒருவர் தட்டிப் பறிக்கும் நயன்தாரா – த்ரிஷா!
» பக்த கோடிகளுக்கான கோஷ்டி கானங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum