தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்தலசயனப் பெருமாள் கோவில்

Go down

ஸ்தலசயனப் பெருமாள் கோவில் Empty ஸ்தலசயனப் பெருமாள் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 10:26 pm

ஸ்தல வரலாறு....

மகாபலிபுரம் அருகே ஸ்தலசயனப் பெருமாள் கோவில் உள்ளது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள திருமால் வெறும் தரையில் சயனித்திருக்கிறார். திருமகளும் "நிலமங்கை'' என்ற திருநாமத்துடன் விளங்குவதும் தனிச்சிறப்பு. இத்தலம் சேதுவுக்கு நிகரான மகிமையைப் பெற்றது என்றும், அதனால் இதற்கு "அர்த்த சேது'' என்ற பெயரும் உண்டு என்று கூறுவர்.

சேதுவில் கடல் நீராடல் எவ்வளவு புனிதத் துவத்தை அளிக்குமோ அதே பலன்களை இங்குள்ள கடலில் நீராடியும் பெறலாம். பொதுவாக கடல் நீராடல் என்பது அமாவாசை, பௌர்ணமி, கிரகண காலங்களில் தான்மேற்கொள்ளவேண்டும் என்ற நியதி உண்டு. ராமேஸ்வரம், சேது மற்றும் மகாபலிபுர கடல் ஸ்நானத்தை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

அதேபோல உத்தராயன, தட்சிணாயன காலங்களிலும் மாசி மகத்தன்றும் கடல் ஸ்நானம் முக்கியமானது. இத்திருதலம் மகப்பேறு அளிக்கும் புண்ணிய தலமாகப் போற்றப்படுகிறது. இத்திருக்கோவில் அருகே அமைந்திருக்கும் ஆதிவராகப் பெருமாள் திருமணப்பேறு அருளும் கருணா மூர்த்தியாய் விளங்குகிறார்.

இவரை ஞானப்பிரான் என்றே திருமங்கை ஆழ்வார் போற்றியுள்ளார். இங்குள்ள தலசயனப் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு கல்கி அவதாரம்போல் அருட்காட்சி தந்தருளியிருக்கிறார். கல்கி அவதாரம் எடுக்கப்போகும் பகவான் இவரே என்பது பக்தர்களின் நம்பிக்கை. மாசிமக நன்னாளில் மகாபலிபுரம் சென்று புண்ணிய கடல் நீராடி புனிதம் அடையலாம்.

மாசி மகத்தன்று இங்குள்ள கடற்கரைக்கு அருள்மிகு தலசயனப் பெருமாளும் ஞானப்பிரானும் மற்றும் ஆரணி அருகே படவேட்டில் அமைந்துள்ள திருக்கோவிலைச் சார்ந்த யோக ராமரின் உற்சவமூர்த்தியும் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum