அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோவில்
Page 1 of 1
அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோவில்
ஸ்தல வரலாறு....
கும்பகோணம் அருகில் அய்யாவாடி என்னும் இடத்தில் பிரத்தியங்கராதேவி கோவில் உள்ளது. மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான்.
காளி பக்தனான அவன், ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவி'க்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான்.
நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு தெரிந்து விட்டது. ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. ராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள். தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள்.
எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் ராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.
சிறப்பம்சம்......
இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. மூட்டை, மூட்டையாகப் போடப்படும் மிளகாய் வற்றல், சிறிது கூட நெடி இல்லாமல் இருப்பது அதிசயமாகும். இந்த யாகத்தில் கலந்து கொண்டால், இழந்த பதவிகிட்டும், எதிரிகள் தொல்லை நீங்கும். கடன் தொல்லை நீங்கும். திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும். சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வந்து பூஜை செய்த காரணத்தால், சனிதோஷம் உள்ளவர்களுக்கு நல்ல பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
கும்பகோணம் அருகில் அய்யாவாடி என்னும் இடத்தில் பிரத்தியங்கராதேவி கோவில் உள்ளது. மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான்.
காளி பக்தனான அவன், ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவி'க்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான்.
நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு தெரிந்து விட்டது. ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. ராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள். தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள்.
எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் ராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.
சிறப்பம்சம்......
இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. மூட்டை, மூட்டையாகப் போடப்படும் மிளகாய் வற்றல், சிறிது கூட நெடி இல்லாமல் இருப்பது அதிசயமாகும். இந்த யாகத்தில் கலந்து கொண்டால், இழந்த பதவிகிட்டும், எதிரிகள் தொல்லை நீங்கும். கடன் தொல்லை நீங்கும். திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும். சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வந்து பூஜை செய்த காரணத்தால், சனிதோஷம் உள்ளவர்களுக்கு நல்ல பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» நாராயணி பிரத்தியங்கிரா தேவி கோவில்
» மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் கோவில்
» சாமுண்டி தேவி கோவில்
» சாமுண்டி தேவி கோவில்
» சாமுண்டி தேவி கோவில்
» மலையாள தேவி துர்க்கா பகவதி பிராட்டியம்மன் கோவில்
» சாமுண்டி தேவி கோவில்
» சாமுண்டி தேவி கோவில்
» சாமுண்டி தேவி கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum