தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்

Go down

மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் Empty மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 1:11 am

மகம் நட்சத்திரல் பிறந்தவர்களுக்கு பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்களும் தங்களது ஆயுள்காலத்தில் அடிக்கடியோ, அல்லது மகம் நட்சத்திரத்தன்றோ வழிபட வேண்டிய திருத்தலம் திண்டுக்கல் மாவட்ட ஒடுக்கம் தவசி மேடை மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

தல வரலாறு:

சீதையை மீட்டு அயோத்தி ராமர், தேவ குருவின் புத்திரரான பரத்வாஜரை சந்தித்தார். அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். அப்போது தனக்கு உதவிய ஆஞ்சநேயருக்கு மரியாதை செய்யும்விதமாக தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி பணித்தார்.

இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது. இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர் இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. மதுரையில் மீனாட்யை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.

மகம் நட்சத்திர கோவில்....

கோவில் முகப்பில் இருண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர் ஒரு தவமேடையில் யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது.

பரத்வாஜர் மகம் நட்சத்தித்தில் பிறந்தவர் என்பதால் மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரத்வாஜரை குருவாக கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவர்கள் என்பது ஐதீகம்.

இரண்டு அம்பிகையர்...

சிவனுக்கு வலதுபக்கத்தில் உள்சன்னதியில் மாணிக்கவல்லி, மரகதவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சி அம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர்.

சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான் அம்மன் சன்னதியில் அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஓட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.

போக்குவரத்து வசதி......
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum