தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாமுண்டி தேவி கோவில்

Go down

சாமுண்டி தேவி கோவில் Empty சாமுண்டி தேவி கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 1:05 am

நீதியை நிலை நாட்ட நீதிமன்றங்கள் இருந்தாலும், கோவிலுக்கு சென்று இறைவனிடம் நீதி கேட்கும் வழக்கம் இன்னும் நம் மக்களிடையே இருந்து வருகிறது. மனிதர்கள் கைவிட்ட நிலையில் தெய்வமே ஒருவருக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

கேரளா மாநிலத்தில் மன்னர்கள் ஆட்சி நடைபெற்ற காலத்தில் இருந்து இன்று வரை கரிக்ககம் சாமுண்டி தேவி சன்னிதானத்தில் பல வழக்குகள் சத்தியம் செய்து உண்மை நிரூபிக்கப்பட்டு வருகிறது. தீராத பிரச்சினைகளும் இங்கு வந்தால் நீதியை நிலை நாட்டி தீர்த்து வைக்கப்படுகின்றன.

சாமுண்டி தேவி கோவில்....... திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது சாமுண்டிதேவி கோவில். இந்த கோவில் அமைந்துள்ள இடம் கரிக்ககம் என்பதாகும். இதனால் சாமுண்டிதேவியை காக்ககத்தம்மா என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

பண்டைய காலத்தில் சேரநாடு திருவிதாங்கூர் படையில் களரிச் சண்டை பயிற்சி நிபுணர்களின் களரிக்களமாக, அதாவது போர் பயிற்சிக் களமாக விளங்கிய இடம் என்பதால் இந்த இடத்திற்கு களரிக்களம் என்ற பெயர் இருந்துள்ளது. நாளடைவில் இப்பெயர் மருவி தற்போது கரிக்ககம் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சிறுமியாக வந்த அம்மன்...... ஒரு காலத்தில் இந்த பகுதியில் துறவி ஒருவர் தனது சீடருடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் இரு வரும் அன்னை பராசக்தி மீது மிகுந்த பக்தி கொண்டு தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். அப்போது ஒரு நாள் அவர்கள் முன்பு சிறுமி உருவில் தோன்றினாள் பராசக்தி.

மூன்று பேரும் நடந்து சென்று கொண்டிருந்த போது, தற்போது கோவில் அமைந்துள்ள இடத்திற்கு வந்ததும், சிறுமி அம்பிகையாக காட்சியளித்தார். இன்பம் தரும் இந்த காட்சியை கண்ட குருவும், சீடரும் ஆனந்தத்தில் திளைத்தனர். பின்னர் அம் மனுக்கு பச்சைப்பந்தல் அமைத்து அங்கேயே குடியிருத்தினர்.

பின்னர் அம்மன் மறைந்ததும் அம்மன் விக்ரகம் செய்து அதனை பிரதிஷ்டை செய்து சாமுண்டி தேவி என்று பெயரிட்டு வழிபட்டு வந்தனர். தொடர்ந்து வந்தவர்களும் இந்த கோவிலை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். பிரம்மாண்டமான கோவில் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது.

மூன்று அம்மன்கள்......... கரிக்ககம் சாமுண்டி தேவி கோவிலில் அம்மனை மூன்று விதமாக வழிபடுவது எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு ஆகும். சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி ஆகிய மூன்று விதங்களில் அம்மன் இங்கு தனித்தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மூன்று சன்னதிகளிலும் அம்மன் ஒரே உருவத்தில் அருள்பாலிக்கிறார். அருள் சுரக்கும் சாமுண்டி தேவி, குறை நீக்கி அநீதியை முறியடிக்கும் ரத்த சாமுண்டி தேவி, அனைத்து ஐஸ்வரியங்களும் தரும் பால சாமுண்டி தேவி என்ற இந்த தெய்வங்களில், சாமுண்டி தேவிக்கு மட்டுமே சிலை உருவ வழிபாடு உள்ளது. மற்ற இரு சன்னதிகளிலும் சுவர் சித்திரமே காணப்படுகின்றன. அங்கு சிலை உருவம் கிடையாது.

நீதியை நிலைநாட்டும்...... தீர்த்து வைக்க முடியாத பிரச்சினைகள் எழும்போது, பிரச்சினைக்குரிய இருதரப்பினரும் இந்த கோவிலுக்கு வருவார்கள். அதா வது குற்றம் சாட்டியவர், குற்றம் சாட்டப்பட்டவர் இருவரும் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு, கோவில் குளத்தில் நீராட வைக்கப்படுவார்கள்.

பின்னர் ஈரத்துணியுடன், ரத்த சாமுண்டி அம்மன் சன்னதி முன்பு போய் நின்று காணிக்கை செலுத்தி, விளக்கேற்றி தீபச் சுடர் மேல் கையை வைத்து சத்தியம் செய்ய வேண்டும். பொய் சத்தியம் செய்கிறவர்களை அம்மன் தண்டிக்கத் தவறுவதில்லை. பொய் சத்தியம் செய்தால் உடனடியாக தண்டனை கிடைக்கும் என்பதால் யாரும் பொய் சத்தியம் செய்ய முன்வருவதில்லை.

பொங்கல் விழா......... ஆலயத்தில் விநாயகர், சாஸ்தா, நவக்கிரகங்கள், ஆயிரம் வல்லி அம்மன் ஆகிய தெய்வங்களின் சன்னதிகளில் உள்ளன. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் திருவிழா நடை பெறும். இந்த ஆண்டு விழா கடந்த 18ந் தேதி தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சி யாக நாளை பொங்கல் விழா நடக்கிறது. இந்த பொங்கல் விழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கலிட்டு அம்மனுக்கு படைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum