தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மல்லசமுத்திரம் அருகே கோவில் பிரச்சினை

Go down

மல்லசமுத்திரம் அருகே கோவில் பிரச்சினை Empty மல்லசமுத்திரம் அருகே கோவில் பிரச்சினை

Post  meenu Tue Mar 26, 2013 5:56 pm

மல்லசமுத்திரம் அருகே சந்தைபேட்டை சோழி ஈஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகம் ஒரு சமூகத்தினரிடம் உள்ளது. நிர்வாகத்தில் பங்கு வேண்டும் என்று இன்னொரு சமூகத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், கோவில் நிர்வாகத்தில் பங்கு வேண்டும் என்று ஒரு சமூகத்தினர் சந்தைபேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 50 வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு தாசில்தார், வருவாய் அலுவலர் ஆகியோர் சந்தைபேட்டை பகுதிகளுக்கு நேற்று சென்று அந்த சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை காத்து இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். அதன்பின்னர் கறுப்புகொடி ஏற்றியவர்கள் வீடுகளில் ஏற்றிய கறுப்புகொடி இறக்கினார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum