தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாளையங்கோட்டையில் ஈழத்

Go down

பாளையங்கோட்டையில் ஈழத் Empty பாளையங்கோட்டையில் ஈழத்

Post  meenu Tue Mar 26, 2013 5:51 pm

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, பாளையங்கோட்டையில் மேடை மெல்லிசை மற்றும் கிராமிய கலைஞர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை செய்த அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் மற்றும் கிராமிய கலைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் மேடை பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், வில்லுப்பாட்டு, நாதசுவரம் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

சோக இசை வாசித்தனர்

காலை முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து பாடிக் கொண்டும், இசை வாசித்துக் கொண்டும், கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டும் உண்ணாவிரதம் இருந்தனர். பாடகர் நெல்லை அபுபக்கர் தலைமை தாங்கினார். நம்பி, தியாகு, சங்கீதன், சமுத்திரம், தமிழரசு, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ம.தி.மு.க.வைச் சேர்ந்த குட்டி என்ற சண்முக சிதம்பரம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். அரிராமன், மணிகுமார், ராம்கி, குமணன், பூசைராஜ், கணேசன், ஆல்பர்ட் பாபு, ரஜினிபாலு, குப்புராஜ், நடராஜன், ஜெயின் உசேன், சுதர்சன், கல்யாணி உள்பட ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர். பெரும்பாலான நேரம் சோக இசை வாசித்துக்கொண்டு கலைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum