தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தென்காசியில் ரோட்டில் நடந்து

Go down

தென்காசியில் ரோட்டில் நடந்து  Empty தென்காசியில் ரோட்டில் நடந்து

Post  meenu Tue Mar 26, 2013 5:49 pm

தென்காசியில் ரோட்டில் நடந்து சென்ற என்ஜினீயர் மனைவியிடம், மோட்டார் சைக்கிளிள் வந்த 2 பேர் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

என்ஜினீயர் மனைவி

தென்காசி சம்பா தெருவை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவர் கப்பலில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி உமா (வயது 36).

இவர் நேற்று காலை சுமார் 8 மணிக்கு தன்னுடைய குழந்தைகள் 2 பேரையும் பள்ளிக்கூட பஸ்ஸில் ஏற்றி விட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

தங்க சங்கிலி பறிப்பு

பரதன் சினிமா தியேட்டர் அருகே வந்த போது ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். உமா அருகே வந்ததும் அவர்கள் வண்டியை நிறுத்தினார்கள். உடனே அதில் ஒருவன் உமாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை இழுத்து பறித்து விட்டு கண் இமைக்கும நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் திருப்பதி விசாரணை நடத்தி வருகிறார்.

பறிக்கப்பட்ட சங்கிலி 9 பவுன் எடை உள்ளது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இந்த சம்பவம் காலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum