தேர்வை கருத்தில் கொண்டு
Page 1 of 1
தேர்வை கருத்தில் கொண்டு
தேர்வை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஊட்டியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
இலங்கை போர்
இலங்கை பிரச்சினையில் தொடர்ந்து திராவிடக்கட்சிகள் நாடகமாடி கொண்டு இருக்கின்றன. 2008–09–ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்தனர்.அப்போது ஜெயலலிதா ஈழத்தமிழர்களை, சிங்கள ராணுவம் வேண்டும் என்று சுட்டுக்கொல்ல வில்லை. போர் நடக்கும் போது அப்பாவி பொதுமக்கள் இறப்பது வழக்கம்தான் என்று கூறினார். 2002–ம் ஆண்டு சட்டப்பேரவையில் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி, விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து கூண்டில் ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இப்படி பட்டவர்கள்தான் ஈழத்தமிழர்களுக்கு அக்கறை கொண்டு உள்ளவர்கள் போல் நடிக்கிறார்கள்.
பிரபாகரன் தாயார்
தி.மு.க. தலைவர் கருணாநிதி பெரிய நடிகர். தொடர்ந்து நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர். மிகப்பெரிய நடிகர். ஆனால் தமிழர்களுக்கு உண்மையான தலைவராக செயல்பட்டார். தமிழ் இன தலைவர் என்று கூறும் கருணாநிதி சிறப்பாக நடிக்கிறார். அவருடன் துணை நடிகர்களும் இருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முடியாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தி.மு.க. தலைவர் வெளியே வந்து உள்ளார்.
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது, அவரை விமானத்தை விட்டு, கீழே இறங்க விடாமல் மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார். ராஜபக்சேவை பகைத்து கொண்டால் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
எம்.ஜி.ஆர்.இருந்தால் தமிழ் ஈழம் அமைந்து இருக்கும்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆகிய 2 பேர் மட்டுமே இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். இவர்கள் இருவரும் இருந்திருந்தால் எப்போதே தமிழ் ஈழம் அமைந்து இருக்கும்.
1983–ம் ஆண்டு இந்திராகாந்தி பாராளுமன்றத்தில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இது போன்று பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவில்லை. தமிழ் ஈழம் அமைந்தால் மட்டுமே இந்திய நலனுக்கு உகந்ததாக இருக்கும். 1992–ம் ஆண்டு பா.ம.க., ஈழத்தமிழர் மாநாட்டை சென்னையில் நடத்தியது. தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காக பா.ம.க. போராடி வருகிறது.
தனித்து போட்டி
வருகிற பாராளுமன்ற தேர்தலில் இலங்கை பிரச்சினை முக்கிய பங்கு வகிக்கும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை பெற்று தர வேண்டும். தனி ஈழம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. தேர்தலை சந்திக்கும்.
2007–ல் ஊட்டியில் பா.ம.க. கூட்டம் நடத்தப்பட்டு 2011–ம் ஆண்டு ஆட்சியை பிடிப்போம் என்று பிரகடனம் படுத்தினோம். ஆனால் திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இனி எந்த காலகட்டத்திலும் திராவிடக்கட்சிகள் உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவோம்.
18 மணி நேர மின் வெட்டு
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் நாள்தோறும் 18 மணி நேர மின் வெட்டு நிலவுகிறது. இதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் தான் காரணம். மின் வெட்டு காரணமாக கோவையில் நாள் ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக 6 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். மின் பற்றாக்குறையை சமாளிக்க பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் 12.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 4.1 ஆக குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரியில் நிலவும் வறட்சி காரணமாக வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள செக்ஷன்– 17 நிலங்களில் வசிக்கும் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். பச்சை தேயிலை குறைந்த பட்ச விலையாக ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும்.
மாணவர்கள் போராட்டம்
ஈழத்தமிழர்களுக்காக மாணவர்கள் போராடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி மாணவர்கள் தங்களது கல்வியை தொடர வேண்டும். தற்போது தொடங்க உள்ள தேர்வுகளை வெற்றிகரமாக எழுதி விட்டு, விடுமுறையில் தங்களது போராட்டங்களை தொடங்க வேண்டும். எனவே மாணவர்கள் தேர்வு முடியும் வரை தற்காலிகமாக போராட்டத்தை கைவிட வேண்டும்.
இலங்கை அரசு ஒரு போதும் இந்தியாவிற்கு நட்பு நாடாக இருந்தது இல்லை. அந்த நாடு சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது தமிழக மீனவர்கள் என்று குறிப்பிடப்படாமல் இந்திய மீனவர்கள் என்று குறிப்பிட வேண்டும்.
கச்சத் தீவு
மீனவர்களின் இந்த பிரச்சினையை போக்க இரு மீனவர்களும் எந்த பகுதியிலும் மீன் பிடித்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்க வேண்டும். மேலும் கச்சத் தீவை மீட்க வேண்டும். 2016–ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை பிடித்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம். தமிழகத்தில் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் மூலம் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். விவசாயத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்தால்தான் உணவு பாதுகாப்பை வலுப்படுத்த முடியும்.
தலித் தலைவர்கள் தலித்மக்களின் சமுதாய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடுவதை விட்டு விட்டு, அந்த சமுதாய இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். அந்த இளைஞர்களை குற்றங்கள் செய்யும் படி தூண்டுகின்றனர்.
ஊட்டியில் நாளை (இன்று) அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஊட்டியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
இலங்கை போர்
இலங்கை பிரச்சினையில் தொடர்ந்து திராவிடக்கட்சிகள் நாடகமாடி கொண்டு இருக்கின்றன. 2008–09–ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்தனர்.அப்போது ஜெயலலிதா ஈழத்தமிழர்களை, சிங்கள ராணுவம் வேண்டும் என்று சுட்டுக்கொல்ல வில்லை. போர் நடக்கும் போது அப்பாவி பொதுமக்கள் இறப்பது வழக்கம்தான் என்று கூறினார். 2002–ம் ஆண்டு சட்டப்பேரவையில் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி, விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து கூண்டில் ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இப்படி பட்டவர்கள்தான் ஈழத்தமிழர்களுக்கு அக்கறை கொண்டு உள்ளவர்கள் போல் நடிக்கிறார்கள்.
பிரபாகரன் தாயார்
தி.மு.க. தலைவர் கருணாநிதி பெரிய நடிகர். தொடர்ந்து நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர். மிகப்பெரிய நடிகர். ஆனால் தமிழர்களுக்கு உண்மையான தலைவராக செயல்பட்டார். தமிழ் இன தலைவர் என்று கூறும் கருணாநிதி சிறப்பாக நடிக்கிறார். அவருடன் துணை நடிகர்களும் இருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முடியாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தி.மு.க. தலைவர் வெளியே வந்து உள்ளார்.
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது, அவரை விமானத்தை விட்டு, கீழே இறங்க விடாமல் மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார். ராஜபக்சேவை பகைத்து கொண்டால் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
எம்.ஜி.ஆர்.இருந்தால் தமிழ் ஈழம் அமைந்து இருக்கும்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆகிய 2 பேர் மட்டுமே இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். இவர்கள் இருவரும் இருந்திருந்தால் எப்போதே தமிழ் ஈழம் அமைந்து இருக்கும்.
1983–ம் ஆண்டு இந்திராகாந்தி பாராளுமன்றத்தில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்று கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இது போன்று பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவில்லை. தமிழ் ஈழம் அமைந்தால் மட்டுமே இந்திய நலனுக்கு உகந்ததாக இருக்கும். 1992–ம் ஆண்டு பா.ம.க., ஈழத்தமிழர் மாநாட்டை சென்னையில் நடத்தியது. தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காக பா.ம.க. போராடி வருகிறது.
தனித்து போட்டி
வருகிற பாராளுமன்ற தேர்தலில் இலங்கை பிரச்சினை முக்கிய பங்கு வகிக்கும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை பெற்று தர வேண்டும். தனி ஈழம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. தேர்தலை சந்திக்கும்.
2007–ல் ஊட்டியில் பா.ம.க. கூட்டம் நடத்தப்பட்டு 2011–ம் ஆண்டு ஆட்சியை பிடிப்போம் என்று பிரகடனம் படுத்தினோம். ஆனால் திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இனி எந்த காலகட்டத்திலும் திராவிடக்கட்சிகள் உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவோம்.
18 மணி நேர மின் வெட்டு
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் நாள்தோறும் 18 மணி நேர மின் வெட்டு நிலவுகிறது. இதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் தான் காரணம். மின் வெட்டு காரணமாக கோவையில் நாள் ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக 6 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். மின் பற்றாக்குறையை சமாளிக்க பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் 12.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 4.1 ஆக குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரியில் நிலவும் வறட்சி காரணமாக வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள செக்ஷன்– 17 நிலங்களில் வசிக்கும் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். பச்சை தேயிலை குறைந்த பட்ச விலையாக ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும்.
மாணவர்கள் போராட்டம்
ஈழத்தமிழர்களுக்காக மாணவர்கள் போராடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி மாணவர்கள் தங்களது கல்வியை தொடர வேண்டும். தற்போது தொடங்க உள்ள தேர்வுகளை வெற்றிகரமாக எழுதி விட்டு, விடுமுறையில் தங்களது போராட்டங்களை தொடங்க வேண்டும். எனவே மாணவர்கள் தேர்வு முடியும் வரை தற்காலிகமாக போராட்டத்தை கைவிட வேண்டும்.
இலங்கை அரசு ஒரு போதும் இந்தியாவிற்கு நட்பு நாடாக இருந்தது இல்லை. அந்த நாடு சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது தமிழக மீனவர்கள் என்று குறிப்பிடப்படாமல் இந்திய மீனவர்கள் என்று குறிப்பிட வேண்டும்.
கச்சத் தீவு
மீனவர்களின் இந்த பிரச்சினையை போக்க இரு மீனவர்களும் எந்த பகுதியிலும் மீன் பிடித்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்க வேண்டும். மேலும் கச்சத் தீவை மீட்க வேண்டும். 2016–ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சியை பிடித்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம். தமிழகத்தில் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் மூலம் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். விவசாயத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்தால்தான் உணவு பாதுகாப்பை வலுப்படுத்த முடியும்.
தலித் தலைவர்கள் தலித்மக்களின் சமுதாய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடுவதை விட்டு விட்டு, அந்த சமுதாய இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர். அந்த இளைஞர்களை குற்றங்கள் செய்யும் படி தூண்டுகின்றனர்.
ஊட்டியில் நாளை (இன்று) அனைத்து சமுதாய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தொந்தி குறைய பயிற்சி செய்யும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை
» நெய் கொண்டு செல்வது ஏன்?
» என்ன கொண்டு வந்தீர்கள்?
» மிளகைக் கொண்டு செய்யப்படும் மருத்துவம்
» கடற்புற்களைக் கொண்டு பவழப்பாறைகளை காக்கலாம்"
» நெய் கொண்டு செல்வது ஏன்?
» என்ன கொண்டு வந்தீர்கள்?
» மிளகைக் கொண்டு செய்யப்படும் மருத்துவம்
» கடற்புற்களைக் கொண்டு பவழப்பாறைகளை காக்கலாம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum